Skip to main content

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன மற்றொரு மீனவர் சடலம் கரை ஒதுங்கியது!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் செந்தில் மற்றும் மதனுக்கு படகு வாங்க 10 மீனவர்கள் கடந்த 2 ந் தேதி கடலூருக்குச் சென்று நவீன நாட்டுப் படகு வாங்கி அதிலேயே 10 பேரும் ராமேஸ்வரம் நோக்கி சென்றபோது முத்துப்பேட்டைக்கு தெற்கே கடல்காற்று அதிகமாக படகு மூழ்கி 10 பேரும் 3 டீசல் கேன்களை பிடித்துக் கொண்டு தவித்துள்ளனர்.  

காற்று அதிகமாக உள்ளதால் மீனவர்களும் கடலுக்குச் செல்லாததால் 10 மினவர்களும் உயிருக்கு போராடியுள்ளனர். அதில் இருவர் நீந்திச்சென்று அந்த வழியாகச் சென்ற படகில் ஏறி மல்லிபட்டினம் வந்து தகவல் கொடுத்தனர்.

 

 Another fisherman's body finded in the sea


அதன்பிறகே படகு கவிழ்ந்த தகவல் தெரிய வந்தது. கடலோர காவல், மற்றும் மத்திய மீட்புக்குழுவினர் தேடினார்கள். இந்தநிலையில் 5 ந் தேதி டீசல் கேன்களின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  4 மீனவர்கள் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படனர். 

கடல் காற்று அதிகமாக இருந்ததில் மற்ற 4 மீனவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் 7 ந் தேதி  முத்துப்பேட்டை அருகே 2 மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது. அந்த சடலங்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல 8 ந் தேதி அதேபகுதியில் கரை ஒதுங்கியது மிகவும் மோசமாக இருந்ததால் மல்லிபட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு கடல்கரையிலேயே பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 

sea


இந்தநிலையில் மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்துவந்தது. இன்று தம்பிக்கோட்டை மறவக்காடு கடல் முகத்துவாரத்தில் தேடப்பட்டு வந்த மீனவர் இலங்கேஸ்வரன் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அந்த சடலத்தை மீட்டு வர கடல் காற்று அதிகமாக இருப்பதால் அருகில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

sea


இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்களை பார்த்து ஆறுதல் சொன்ன நடிகர் பரதன் இலங்கேஸ்வரன் சடலம் கிடந்த பகுதிக்கு செல்ல முயன்றார். ஆனால் காற்று அதிகமாக இருந்ததால் செல்ல முடியவில்லை. அதனால் இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் சிகிச்சையில் உள்ள மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதுடன் மூழ்கிய படகுக்கு பதிலாக மாற்று படகு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம்  கோரிக்கை வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.