விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாகவும், அதனை விடுதலை புலிகள் இயக்கம் தான் செய்ததாகவும், அதற்காக நாங்கள் பெருமைப்படுவதாகவும் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸார் சீமானுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் தலைமையில் காங்கிரஸார், உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.