Advertisment

மீண்டும் வெளியான அறிவிப்பு... நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Announcement again ... Chief Minister with all District Collectors tomorrow

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகச் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. அதேபோல் கடந்த 21 ஆம் தேதி தமிழகம் வந்த மத்திய ஆய்வுக் குழுவும் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நாளை இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தலைமைச் செயலகத்தில் காணொலி வழியாக முதல்வர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

Advertisment

District Collector meetings TNGovernment weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe