Skip to main content

ஸ்டாலின் தலைமையிலான அரசாவது இதில் கவனம் செலுத்தவேண்டும்" - ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை...

Published on 31/05/2021 | Edited on 31/05/2021
"Announce us as frontline workers and provide the right amount of funds" - Panchayat leaders murmur

 

கரோனா விழிப்புணர்வு குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமராட்சி தமிழ்வாணன், பட்டு சௌந்தரராஜன், செட்டி கட்டளை செல்வகுமார், வரகூர் பாலா உட்படப் பல ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் கரோனா பரவாமல் தடுப்பது குறித்து சார் ஆட்சியர் மதுபாலன் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார். 

 

நிகழ்ச்சி நடந்து முடியும்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமராட்சி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் சார் ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார். அதில் “ஒவ்வொரு ஊராட்சியிலும் போதிய நிதி வசதி இல்லாமல் தலைவர்களான நாங்கள் தத்தளிக்கிறோம். அரசு அதிகாரிகள் கிராமப்புறங்களில் செய்யவேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறு உத்தர விடுகிறார்கள். தலைவர்கள் சொந்தப் பணத்தில் செலவு பணிகளைச் செய்யுமாறு கூறுகிறார்கள். அதன்படி நாங்களும் கடன் பெற்று மக்களுக்கான பணிகளைத் தொய்வின்றி செய்கிறோம். ஆனால் அரசு நாங்கள் செலவு செய்த அந்த பணத்தைத் திருப்பித் தரவில்லை. அதற்கு உதாரணம் கடந்த ஆண்டு புரவி புயலின் போது அந்தந்த கிராமத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு வாரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 

அதன்படி அதற்கான முழு செலவையும் நாங்களே செய்தோம். அதற்கான தொகை இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு வரவில்லை. இதேபோன்று, ஊராட்சியின் பொது நிதியில் போதுமான நிதி இல்லாததால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களுடன் கலந்து அவர்களின் தேவைகளை, பிரச்சனைகளை நேரில் சென்று உடனுக்குடன் நிறைவேற்றி வரும் எங்களையும் அரசு முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அது மேலும் பரவாமல் தடுக்கவும் அரசு ஊராட்சிகளுக்குக் கூடுதல் நிதியை உடனடியாக அளித்து உதவ வேண்டும். அப்போதுதான் எங்களால் பணிகளைத் திறம்படச் செயல்படுத்த முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

சார் ஆட்சியர் மதுபாலன் இந்தக் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கரோனா விழிப்புணர்வு கூட்டம் நிறைவுபெற்றது. மேலும், தமிழக அரசு ஊராட்சிகளுக்குக் கூடுதலாக அவசரக் கால நிதியை அனுப்பி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை, அடிப்படைத் தேவைகளுக்கான செயல்பாடுகளை மேற்கொண்டிட விரைந்து உதவிட வேண்டும் என வலியுறுத்தினர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஊராட்சிகளுக்குத் தேவையான நிதி கடந்த ஆட்சியில் ஒதுக்கப்படவில்லை எனக்கூறிய ஊராட்சி மன்ற தலைவர்கள், ஸ்டாலின் தலைமையிலான அரசாவது அதில் தீவிர கவனம் செலுத்தி ஊராட்சிகள் தன்னிறைவு பெறும் வகையில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.