பேரறிஞர் அண்ணாவின்113வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்திருச்சி மாவட்டத்திலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.