தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113வது பிறந்ததினம் இன்று (15.09.2021) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், இன்று காலை அவரின் திருவுருவப் படத்துக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா. சுப்பரமணியன், சேகர்பாபு, ஐ. பெரியசாமி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

Advertisment