ADVERTISEMENT

ட்ரங்கு பெட்டியுடன் ஆளுநரிடம் புகாரளித்த அண்ணாமலை

04:38 PM Jul 26, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் சிலரின் சொத்துப்பட்டியல் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு திமுக சார்பில் அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநரை, இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். சந்திப்பின்போது திமுக சொத்துப்பட்டியல் - 2 குறித்துப் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக சொத்துப் பட்டியல் - 2 எனப் பெரிய ட்ரங்கு பெட்டியை தமிழக ஆளுநரிடம் வழங்கினார். இதில் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 'என் மண்; என் மக்கள்' என்னும் ஊழலுக்கு எதிரான பேரணியை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், தற்போது ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT