Skip to main content

அண்ணாமலைப் பல்கலை ஊழியர்களைத் திரும்ப அழைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி துணைவேந்தரிடம் மனு

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

annamalai university tamilnadu government office


அண்ணாமலைப் பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் குமாரவேல், பொதுச்செயலாளர் கே.பன்னீர்செல்வம், பொருளாளர் ஏ.பன்னீர்செல்வம் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசனைச் சந்தித்து மனு ஒன்று கொடுத்துள்ளனர். 


அதில், "கடந்த 2017- ஆம் ஆண்டு நிதி சிக்கல் என்று பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களைக் கலந்தாய்வு செய்யாமல் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குத் தமிழக அரசின் அலுவலகங்களுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மிகவும் சொற்ப ஊதியம் வாங்கும் இவர்கள் குடும்பத்தை மாற்றமுடியாமல், அவர்கள் மட்டும் பணிக்கு அமர்த்திய ஊரில் தங்கி பணி செய்து வருகிறார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான 60- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 3 ஆண்டில் இறந்துள்ளனர்.

இந்தநிலையில் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் பணியமர்த்தப்பட்ட 205 ஊழிர்களின் ஒப்பந்த காலம் கடந்த 11- ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஒப்பந்தப் பணிகள் முடிவடைந்த பல்கலைக்கழக ஊழியர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையை நிர்வாகம் கைவிடவேண்டும்.

 

 


அதேநேரத்தில் பணி நீட்டிப்பு நடவடிக்கை ஏற்படும் சூழலில் தற்போது பணிநிரவல் சென்ற ஊழிர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள ஊழியர்களைக் கலந்தாய்வு முறையில் சுழற்சி அடிப்படையில் அரசின் அலுவலகங்களுக்குப் பணிநிரவல் பணிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பணிநிரவல் சென்ற ஊழியர்களுக்குப் பாகுபாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.