Skip to main content

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் கல்வி உதவிதொகைக் கேட்டுப் போராட்டம்! 

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Annamalai University. Students struggle for scholarships!

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் பொறியியல் மாணவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிக்கான கல்வி உதவிதொகை கடந்த மூன்று ஆண்டுககளாக வழங்காததைக் கண்டித்தும் மற்ற அரசு பொறியியல் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தை இந்தக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி வகுப்பைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரவேல் கலந்துகொண்டு மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் மத்தியில் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 30-தேதிக்குள் கல்வி உதவி தொகை வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்துசென்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செம்மலர், செயலாளர் குமாரவேல் கூறுகையில், ‘அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் புலத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு மற்ற அரசுப் பல்கலைக்கழகம் போலவே கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். பல்கலை கழகம் அரசு பல்கலைகழகமாக ஆன பின்பும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இங்கு ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் 5,500 மற்றும் சிறப்புக் கட்டணம் 15,000 இதர கட்டணம் 10,000 அளவில் வசூலிக்கப்படுகிறது. சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு பல்கலைக்கழகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து உதவித்தொகை இயக்குனரிடம் கேட்டபோது உதவித்தொகையில் பாதி பணத்தை தருகிறோம்  மீதிப் பணத்தில் பல்கலைக்கழகத்திற்கு பெயிண்ட் அடித்து விட்டோம் என அலட்சியமாகப் பதில் அளிதிருக்கிறார். மாணவர்களுடைய உதவித்தகையை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடித்ததோடு மட்டுமல்லாமல் பணத்தை முழுமையாகக் கொடுக்கமாட்டோம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவதையும், எந்த விதமான அனுமதியின்றி மாணவர்களின் பணத்தை செலவழித்த பல்கலைக்கழக நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உரிய கல்வி உதவித்தொகையை முழுமையாக ஆண்டுக்குத் தலா ரூ 20 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். மற்ற அரசு பல்கலைக் கழகங்களில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை இங்கும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது’ என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.