Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி கட்டணம் உயர்வு மாணவர்கள் தொடர் போராட்டம்...

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதிகளில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தேர்தலை புறகணிக்கபோவதாக அறிவித்து  இரவு பகல் பாராமல் தொடர்ந்து ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

annamalai university students protest

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் 19 விடுதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ரூ 45 ஆயிரம்  விடுதியின் ஆண்டு கட்டணமாக செலுத்தி விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள்.
 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென ரூ 5,000 விடுதி கட்டணத்தை  உயர்த்தியுள்ளது.  இதற்கு மாணவர்கள் திடீரென உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும்,  மாணவர்களிடம் வசூலிக்கும்  ரூ 45,000 விடுதி கட்டணத்திற்கு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். விடுதிகளில் வைப்பு தொகை ரூ. 5,000 வசூலிப்பதை பிடித்தமில்லாமல் திருப்பி அளிக்க வேண்டும். கல்வி உதவி தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பற்றிய தெளிவான குறுஞ்செய்தி மற்றும் வெள்ளை அறிக்கையை அளிக்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 


பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் என யாரும் இதுவரை மாணவர்களை அழைத்து பேசுவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்தில் மாணவர்கள் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் பாதகைகள் ஏந்தி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .