Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Annamalai University staff wore black card  to emphasize 12-point demands.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு தனிச்சட்டம் இயற்றி அரசு ஏற்றது. அதன் பிறகு ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களது பதவி உயர்வு, பணப்பலன்கள், தொகுப்பு மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் பல்கலைக்கழக நிர்வாகம் நிதிச்சிக்கலை காரணம் காட்டி இதுவரை எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

 

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 2 மாதங்களாக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழகத்தில் 4 முறை வாயில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதற்கு நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லுதல், மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துதல், ஊர்வலமாகச் சென்று உதவி ஆட்சியரிடம் மனு அளித்தல், உண்ணாவிரதப் போராட்டம், தொடர் காலவரையற்ற போராட்டம் என 6 கட்டப் போராட்டத்தை கடந்த வாரம் அறிவித்தனர்.

 

இதன் முதல் கட்டமாக  செவ்வாய்க்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்தபடி பணிக்குச் சென்றனர். கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் புதன்கிழமையும் நடைபெறுகிறது. கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.