Skip to main content

அண்ணாமலைப் பல்கலை. தொழில்நுட்ப உதவியாளர்களைத் தகுந்த பணியில் அமர்த்த கோரிக்கை

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Annamalai University Request for placement of technical assistant in suitable posts

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி சிக்கல் காரணமாகத் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களைப் பணி நிரவல் செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 177 தொழில்நுட்ப உதவியாளர்களைத் தமிழகத்தின் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவற்றுக்குப் பணி நிரவல் செய்தனர். ஆனால் இவர்களுக்குத் தொழில்நுட்ப உதவியாளர் என்ற பணிக்குப் பதிலாக அலுவலக உதவியாளர் என்று பணி இறக்கம் செய்து நியமித்துள்ளனர்.

இதனால் பணி செய்யும் இடங்களில் இவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவதாகவும் தொழில்நுட்ப உதவியாளர் தகுதிக்கேற்ற பணி வழங்க வேண்டும் என அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி துணைவேந்தர் கதிரேசனை சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உயர் கல்வித்துறைக்கு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.