Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவகல்லூரியை பல்நோக்கு மருத்துவ கல்லூரியாக மாற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சட்டபேரவையில் தாக்கல் செய்தார். இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். மேலும் இது கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரியாக செயல்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு சிதம்பரம் பகுதி மக்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஊழியர் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

 

Annamalai university - medical college - tamilnadu Government

 



இதுகுறித்து கடந்த 2012-ம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "அப்போது பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்று அப்போதிருந்து பல்கலைக்கழக ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பின்னர் இதுகுறித்தும் அரசு முழுகட்டுபாட்டில் எடுக்கவேண்டும் என்று எனது தலைமையில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து மிகபெரிய போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று மனு கொடுத்து வலியுறுத்தியதின் பேரிலும் இதுகுறித்து சட்ட மன்றத்தில் பேசியதின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தை அரசு 2013-ல் முழு கட்டுபாட்டில் எடுத்தது.

 

Annamalai university - medical college - tamilnadu Government



அதே நேரத்தில் இதனுடன் இணைந்த மருத்துவ கல்லூரியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். அதனையொட்டி கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவகல்லூரியாக மாற்றுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் மருத்துவகல்லூரி மருத்துவமனை சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது அரசு மாவட்ட மருத்துவகல்லூரியாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை தற்போதுள்ள நிலையிலே நடத்தாமல் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும்" என்று தமிழக அரசை கேட்டுகொண்டார்.

2012 ஆண்டுகளில் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த மதியழகன் கூறுகையில், "பல்கலைக்கழகத்தை சீர்படுத்த எடுத்த கோரிக்கையில் இதுவும் ஒன்று. இதுகுறித்து சட்டமன்றத்தில் அப்போதைய எம்எல்ஏ பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். பின்னர் அரசு பல்கலைக்கழகத்தை முழுகட்டுபாட்டில் எடுத்த பிறகு பல்கலைக்கழக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் முதன்மை ஆட்சியர் ஷீவ்தாஸ்மீனாவிடம் பல்கலைக்கழக நிதி சிக்கலை சரிசெய்ய இந்த கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தினோம். 

 

Annamalai university - medical college - tamilnadu Government



அதன் அடிப்படையில்  தற்போது இதனை மாவட்ட மருத்துவ கல்லூரியாக அறிவித்துள்ளது. கடலூர் மாவட்ட மக்களின் வரபிரசாதமாகும். இங்கு பயிலும் மாணவர்களுக்கு மற்ற அரசு மருத்துவகல்லூரிகளில் என்ன கட்டணமோ அதே கட்டணம் இனிமே வசூலிக்கப்படும். அரசின் மற்ற மருத்துவகல்லூரியில் இருந்து அனைத்து விதமான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணிமாறுதல் பெறுவார்கள். எனவே இதனை அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிலையில் இபோதுள்ள அனைத்து குறைகளையும் சரிசெய்து எந்த குறைகளும் இல்லா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போல் பல்நோக்கு வசதிகள் கொண்ட மருத்துவ கல்லூரியாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்று அரசை கேட்டுகொண்டார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.