Skip to main content

ஊரடங்கால் திகைத்து நின்ற காஷ்மீர் மாணவர்கள்... தோள் கொடுத்த தமிழக மாணவர்கள்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

ANNAMALAI UNIVERSITY KASHMIR STUDENTS NEED HELP TN GOVT


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் அண்ணாமலை நகர் பகுதியில் தனித்தனியாக வீடு எடுத்துத் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த ஒரு வாரமாக உணவு, குடிநீர் ஏதுமின்றி வெளியே செல்ல அச்சப்பட்டு, அண்மையில் பெய்த மழையால் அந்த மழைநீரைச் சேமித்து வைத்து குடிநீராக மூன்று நாட்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 
 

சொந்த ஊர் திரும்புவதற்குப் பதிவு செய்யப்பட்ட விமானங்களும், ரயில்களும் ரத்து செய்யப்படுள்ளது. மேலும் வங்கியில் இருந்த சிறு தொகையும் உடன் படிக்கும் மாணவர் ஒருவரின் மருத்துவத்திற்கு செலவழித்து விட்டார்கள். இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையிலும் கூட அவர்கள் உதவி கேட்கத் தயங்கி, பல்கலைக்கழக ஆசிரியர்களும், குடும்பத்தினரும் தங்கள் நிலையை அறிந்து வருத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர்.
 

ANNAMALAI UNIVERSITY KASHMIR STUDENTS NEED HELP TN GOVT


இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திலிருந்து பல்கலைகழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஓரிடத்தில் கூடி அவர்களின் சூழ்நிலையை விளக்கியும் சிறப்பு ஏற்பாடு செய்து எங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் எனவும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது பல்கலைக்கழக நிர்வாகம் வரை சென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள். 


இந்த நிலையில் சிதம்பரத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர் குபேரன், சம்மந்தப்பட்ட காஷ்மீர் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறி கண்ணீர் சிந்தி "ஏண்டா எங்க கிட்ட சொன்னா நாங்க எதுவும் உதவி பண்ண மாட்டோமா?" என தழுதழுத்த குரலால் அவர்களிடம் பேசி எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று கூறி முதல் கட்டமாகச் சிதம்பரம் பகுதி நண்பர்களின் உதவியால் குடிநீர், பிரட் உள்ளிட்ட உதவிகளைச் செய்துள்ளனர்.

இதில் எந்த வசதியும் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள 20 பேருக்கு பிரபாகரன், வேந்தன் சுரேசு, மயில்வாகனன், பெருமாள் உள்ளிட்ட தன்னார்வக் குழுவினர் அவர்களால் முடிந்த அரிசி, காய்கறிகள், எண்ணெய், சர்க்கரை, மிளகாய்தூள், முகக் கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அவரவர் தங்கியிருக்கும் இல்லங்களுக்குச் சென்று வழங்கியுள்ளனர்.  
 

http://onelink.to/nknapp


இதில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். தற்போது ரம்ஜான் நோன்பு காலத்தில் உணவின்றி மிகவும் சோர்ந்து போயிருந்தும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருந்த அம்மாணவர்கள் சிறு உதவியைக் கண்டு நெகிழ்ந்து யாரோ என விட்டுவிடாமல் எங்கிருந்தோ வந்த தங்களுக்கும் நலம் விசாரித்து உதவியளித்த நமது பண்பாடு கண்டு நன்றி பெருக்கோடு தமிழில் "நன்றி" தெரிவித்துள்ளனர்.  

காஷ்மீர் மாணவர்கள் எப்படியாவது சிறப்பு ஏற்பாடு செய்து எங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு முயற்சி செய்ய வேண்டும் எனவும், அதுவரை உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.