Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டம்...ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் இல்லை: ஓ.என்.ஜி.சி செயல் அதிகாரி பேட்டி!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உள்ள 7 வகுப்பறைகளை ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 9 லட்சத்தில் ப்ரொஜக்டர்கள்,ஸ்மார்ட் போர்டுகள் உள்ளிட்ட அதி நவீன கருவிகள் கொண்டு வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்பாட்டுக்கு துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேசன் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார். ஒஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷியாம்மோகன், பொதுமேலாளர் மணி மற்றும் பல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

hydrocarbon project not get permission in union govt ongc ceo speech


இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷியாம்மோகன் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓஎன்ஜசி நிறுவனம் குருடாயில் மற்றும் இயற்கை எரிவாயுவை மட்டும் எடுத்து வருகிறது. இதனால் இதுவரை எந்த பாதிப்பும் வந்தது இல்லை. தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய பெட்ரோல் துறை அமைச்சகம் தமிழகத்தில் ஷேல் மற்றும் மீத்தேன் வாயுக்களை எடுக்ககூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே எங்களுக்கு அனுமதி இல்லை. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தும் முயற்சியும் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இல்லை.

hydrocarbon project not get permission in union govt ongc ceo speech


தமிழகத்தின் டெல்டா பகுதி உள்ளி பல இடங்களில் குருடாயில் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளதா என்று நாங்கள் ஆய்வு செய்து சிலுவை வடிவ குழாய் அமைத்துள்ளோம். இதனை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு ஒற்றை வடிவ அனுமதி வழங்கி இருந்தாலும். மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தமிழகத்தில் செயல்படுத்தகூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பிச்சாவரம் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதற்கான அனுமதியும் இல்லை என்று கூறினார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.