Skip to main content

நிதிச்சிக்கலில் அண்ணாமலை பல்கலை... பல கிலோ மீட்டர் தூரத்தில் பணிமாற்றம்... வேதனையில் ஊழியர்கள்

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிதி சிக்கலின் காரணமாக தமிழக அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 12 ஆயிரத்து 500 பேருக்கு சம்பளம் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை, இந்த நிலையில் தமிழக அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் போக்குவரத்து துறை அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாற்றியுள்ளனர்.

இதுவரை 4500 க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை மாற்றியுள்ளனர். இதில் அதிகமாக குறைவாக சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்கள் தொலைதூரத்திற்கு மாற்றலாகிச் சென்று சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வேலை செய்யும் இடங்களில் சமைத்தும் தங்கி வருகிறார்கள்.

 

Annamalai University in Financial trouble ... Many kilometers away to work ...

 

மேலும் அதிக சம்பளம் வாங்கும் 850 சிறப்பு அதிகாரி என்ற பொறுப்புகளில் உள்ளவர்களை இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இவர்களை மாற்றினாலே போதும் 4500 பேருக்கும் இணையாக இவர்களது சம்பளம் இருக்கும் எனவே நிதிநிலை குறைய வாய்ப்பு உள்ளது என்றது ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் சிறப்பு அதிகாரிகளாக உள்ளவர்கள் தமிழக அரசின் பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய முயற்சித்தபோது அவர்களுக்கு பல பேருக்கு தகுதியே இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான சம்பவமாக உள்ளது.

மேலும் இவர்களுக்கு கல்விக்கு ஏற்ற தரத்தைக் குறைத்து சம்பளத்தை அதற்கேற்றவாறு நிர்ணயம் செய்து தமிழக அரசின் பணிகளுக்கு அனுப்பலாம் என பல்கலைக்கழகம் முடிவெடுத்த போது, இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஊழியர்களுக்கு எதிரான நிலைதான் ஏற்படும் என்ற அறிந்தவர்கள் சம்பந்தப்பட்ட உயர் கல்வித் துறையின் அமைச்சரின் நெருங்கிய உறவில் தம்பி ஒருவரும் இதில் உள்ளார். அவரது ஏற்பாட்டில் ஒருவருக்கு ரூபாய் 3 லட்சம் என வசூல் செய்து மொத்தம் 25 கோடி ரூபாய் கொடுத்து இவர்களுக்கு சம்பளம் குறைக்காமல் அப்படியே தமிழக அரசின் பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் தகவலாக உள்ளது.

 

Annamalai University in Financial trouble ... Many kilometers away to work ...

 

இதுவரை 17 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளதாகவும், மீதி பணம் விரைவில் கொடுக்க உள்ளதாகவும் இதனை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த s.o. என்கிற பதவிகளில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் இருக்கும் இருந்த உறவினர்கள் அதிகம் பேர் உள்ளதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பல்கலைக்கழகம் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

தகுதி இல்லாதவர்களை வைத்து பல்கலைகழகம் நடத்தப்படுகிறது. ஆனால் தகுதி உடையவர்களை பல கிலோ மீட்டர் தூரம் பணிமாற்றம் கொடுத்து வேதனை அடைய செய்ய வைக்கப்பட்டது பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் கடைநிலை ஊழியர்கள் பணி மாற்றத்தின் பிறகு மன உளைச்சலால் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.