Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிலையான வேளாண்மை கருத்தரங்கம்!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய பொது நிர்வாக நிறுவனம் விழுப்புரம் மற்றும் கடலூர் கிளைகள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் இணைந்து நிலையான வேளாண்மை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. வேளாண் புல முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசுகையில், "புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நிலையான வேளாண் பணிகளை மேற்கொள்வதன் வாயிலாக விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைய முடியும்" என்றார். 

ANNAMALAI UNIVERSITY AGRICULTURE SEMINAR STUDENTS PROFESSORS

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட இந்திய பொது நிர்வாக அமைப்பின் பொறுப்பாளர் ரங்கராமானுஜம் பேசுகையில் "இன்றைய பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணவும், விவசாயிகள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண இன்றைய இயற்கை வேளாண் தொழில் நுட்பங்களான ஜீரோ பட்ஜெட் விவசாய குறைகளை செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக குறைந்த ஈடு பொருள் செலவில் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்" என்றார். வேளாண்மை துறை உதவி பேராசிரியர் ராஜ்பிரவின் மற்றும் கடலூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் சேகர், சையத்சக்காப், கண்ணன் ஆகியோரின் ஆய்வு மற்றும் அனுபவ பகிர்வுகள் நடைபெற்றது.


சுமார் 200 வேளாண் இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் வேளாண் விரிவாக்கத்துறை முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க துறைதலைவர் வெற்றிச்செல்வன், கிராமப்புற வளர்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் வேதாந்த தேசிகன், சண்முகராஜா மற்றும் ரங்கராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் விழுப்புரம் பொறுப்பாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.