Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published on 20/07/2019 | Edited on 20/07/2019


கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேரூந்து நிலையம் அருகே காந்தி சிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்திற்கு பணி நிரவல் ஊழியர்களின் பிரதிநிதிகள் குமரவேல், யாதவ சிங், பன்னீர்செல்வம், வேல்ராஜ், ஏ. பன்னீர்செல்வம், முருகன் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர்.  காலை முதல் மாலை வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மிகை ஊழியர்களாக கருதி 2500 க்கும் மேற்பட்டவர்களை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணிநிரவல் செய்துள்ளனர்.

 

a

 

ஊழியர்களை தொலைதூர பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்ததால் மன உளைச்சலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இறந்து போகும் சூழலில் உள்ள ஊழியர்களை  பாதுகாக்க வேண்டும்.  மன உளச்சலின் காரணத்தால் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்துள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஊழியர்களை மிகை ஊழியராக கணக்கெடுப்பு செய்ததில் பல்வேறு குளறுபடிகளும் முறைகளும் நடந்துள்ளது அதை சரி செய்து திரும்ப பெற வேண்டும்.

 

 பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின்படி பணிநிரவல் மேற்கொள்ளப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது. பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகளுக்கும் ஏற்பட்ட நிதி சிக்கலுக்கும் நீதி அரசர் மூலம் நீதி விசாரணை நடத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து சரியான முடிவை பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் எடுக்கவில்லை என்றால் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று போராட்டத்தில் அறிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலை சார்பில் பழங்குடியின பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
NN

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கொல்லிமலை இணைந்து இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடியின பெண்களுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்றது.

இந்த பயிற்சித் திட்டத்திற்கு பல்கலைக்கழக முனைவர் பாலமுருகன் வரவேற்றார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.புவியரசன் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் 'கணினிகள் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இப்பயிற்சி பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்க உதவும்' எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பாலமுரளிதர். பழங்குடியின கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காளியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்கள். முனைவர்கள் பிரவீனா, சாய் லீலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Annamalai University offers higher education opportunities to Scheduled Tribe students

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிராய்வு மையத்தில் பட்டியல் (இருளர்) பழங்குடி இன மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் மையம், பரங்கிப் பேட்டைப் பகுதியில் வாழும் இருளர் பழங்குடியின மக்கள் சார்ந்துள்ள நிலப்பரப்பிற்கான வளர்ச்சி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. இம்மையத்தின் சார்பில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் சேற்று நண்டு வளர்ப்பு முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

இம்மையத்தால் இதுபோன்று நடத்தப்படுகின்ற பயிற்சிகளின் மூலம் கடல்சார் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதனால் அவர்களில் சிலர் கடல்சார் தொழில் முனைவோராகவும் உருவாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து வருகின்றது. இதற்குச் சான்றாக இந்த வருடம் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் இரண்டு இருளர் பழங்குடியினர் குடும்பங்களைச் சார்ந்த மாணவிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற வாய்ப்பு பெற்றனர்.

 

அம்மாணவர்கள் B. Voc. Aquaculture துறையில் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகம் அவ்விரு மாணவர்களுக்கும் தமிழக அரசின் பழங்குடியினர் நல கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தந்து அவர்கள் உயர் கல்வியைத் தொடர உதவுகின்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசனை சந்தித்து நன்றி கூறினர்.