Skip to main content

அவதூறு பரப்பும் மலிவான அரசியல் செய்யும் அண்ணாமலை!- துரை வைகோ சுளீர்!

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

Annamalai is a cheap political place that spreads slander! - Durai Vaiko Sulir!

 

கடந்த மே 6- ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம்- ஓ.மேட்டுப்பட்டி அருகே, எஸ்.ஆர். நாயுடு கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளாகி, பயணம் செய்த 60 மாணவியர்களில் 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி கௌரியைச் சந்தித்து ஆறுதல் கூறினார், மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ. அங்கு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டு பேட்டியளித்தார்.  

 

பிரதமரின் திட்டங்களில் முறைகேடு நடக்கிறது. அதனால், ஒவ்வொரு தாலுகாவிலும் பா.ஜ.க. சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?

குறைகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது.  தவறுகள் ஏதேனும் இருந்தால்,  அதிமுகவினரோ, பாஜகவினரோ சுட்டிக் காட்டலாம்.  அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.  அதை விட்டுவிட்டு,  மாநில சுயாட்சியைத் தவிடுபொடியாக்கும் வகையில்,   ஒன்றிய அரசு மூலம்,  இவர்களாகவே ஒரு போலியான அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார்கள். அது நடக்கக்கூடாது.

Annamalai is a cheap political place that spreads slander! - Durai Vaiko Sulir!


தமிழக மீனவர் விவகாரத்தில் அண்ணாமலை இலங்கை சென்றபிறகே, பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. திராவிட கட்சிகள் வெறும் அரசியல் மட்டுமே செய்கின்றன என அர்ஜுன் சம்பத் பேசியிருக்கிறாரே? 

சகோதரர் அர்ஜுன் சம்பத்தாக இருக்கட்டும்..  சகோதரர் அண்ணாமலையாக இருக்கட்டும். அவர்களது  அறிக்கைகளைப் பார்க்கும்போது மலிவான அரசியலே செய்கின்றனர். இலங்கையில் நிலவும்  தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி,  இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து,  தமிழக மீனவர்கள் பிரச்சனையைச் சரி செய்யவும்,  கச்சத்தீவை மீட்கவும், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீட்க இயலாவிட்டாலும், கச்சதீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையையாவது வாங்கித் தரவேண்டும். இதில் அரசியல் எதுவும் கிடையாது. சகோதரர் அண்ணாமலைக்கு நான் கூறிக்கொள்வதெல்லாம், குற்றச்சாட்டுகளையும் குறைகளையும்  கூறலாம். அவதூறு பரப்பும் மலிவான அரசியல் பண்ணக்கூடாது. 

இவ்வாறு பதிலளித்தார் துரை வைகோ.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தி.மு.க கூட்டணி; திருச்சி தொகுதி வேட்பாளர் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Trichy Constituency Candidate Announcement for DMK alliance

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி அண்ணா அறிவாலயம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதன்படி ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி அறிவிக்கப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கையெழுத்தானது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, மதிமுக - 1 தொகுதி, விசிக - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று (18-03-24) கையெழுத்தாகி ஒப்பந்தமானது. அதன்படி, மதிமுகவுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிட்டது. 

இந்த நிலையில், திருச்சி தொகுதியில் மதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இது குறித்து, வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். மதிமுகவுக்கு தேர்தல் சின்னம் இன்னும் முடிவாகவில்லை. பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். பம்பரம் சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி. அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால், பட்டியலில் இருக்கக்கூடிய 3 சின்னத்தை தேர்ந்தெடுத்து, அதில் ஒரு சின்னத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். புதிய சின்னம் கிடைத்தாலும் பாதகம் இல்லை. மக்களிடம் எளிதாக கொண்டு செல்வோம்.” என்று கூறினார்,  

Next Story

குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ministers who started the event of setting up small shops

சிவகாசி விஸ்வநத்தம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாக காட்சி அளித்தது. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள், அன்றாடம் வேலை செய்யும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் இணைந்து விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இவர்கள் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பசுமைக் காடுகள் அமைக்க திட்டமிட்டனர். இவர்களுக்கு உதவ முன்வந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, இடத்தைப் பார்வையிட்டு ஊராட்சித் தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்ததோடு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் பலமுறை சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கிச் சொன்னார்.

அதைத் தொடர்ந்து குறுங்காடுகள் அடர்வனம் அமைக்க அறக்கட்டளைக்கு அனுமதி அளித்து அமைச்சர் சேகர்பாபு ஆணை வெளியிட்டார். இன்று காலை 10.30 மணிக்கு முதற்கட்டமாக 7 ஏக்கர் இடத்தில் குறுங்காடுகள் அடர்வனம் அமைக்கும் நிகழ்வு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினர். இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி. சதன் திருமலைக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் கண்ணன், பா.வேல்முருகன், ஆர்.எஸ். இரமேஷ், இல.சுதா பாலசுப்பிரமணியன், முனியசாமி பசும்பொன் மனோகரன், மார நாடு, ஜெயராமன், வி.கே.சுரேஷ், மதிமுக சட்டத்துறை செயலாளர் சூரி நந்தகுமார், சிவகாசி மேயர் சங்கீதா, இன்பம் ஒன்றியச் சேர்மன் விவேகன்ராஜ், ஊராட்சி தலைவர் ஏ.எல். நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டக் கழக முன்னணி நிர்வாகிகள், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக அரங்கில் அமைக்கப்பட்ட திரையில் திரையிடப்பட்டது. துரை வைகோவின் முயற்சிகளையும் பூமித்தாயை காப்பதில் துரை வைகோ கொண்டிருக்கும் அக்கறையையும் துல்லியமாக குறும்படம் எடுத்துரைத்து பார்வையாளர்களை கவர்ந்தது. அமைச்சர்கள் தங்களது பேச்சில் அதனை உள் வாங்கி துரை வைகோவை பாராட்டினர்.