Skip to main content

சென்ற ஆண்டு வினாத்தாளையே இந்தாண்டு கொடுத்த அண்ணா பல்கலை!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
ann

 

தேர்வு எழுதும்போது மாணவர்கள் மதிப்பெண் பணத்திற்காக போடப்பட்டது என்ற பிரச்சனை பெரியதாகிய நிலையில் தற்போது மாணவர்கள் சிரமப்படாமல் இருக்க சென்ற ஆண்டு வினாத்தாளையே இந்தாண்டு கொடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 

 

p

 

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் தமிழக முழுவதும் உள்ள 538 உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற  ஏழாவது செமஸ்ட்டர் இ.சி பேப்பர் (electronice  and communication engineering) 2.11.18 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் கொடுத்த வினாத்தாளே மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் வினாத்தாளை தயார் செய்வார்கள்.  அப்படி தயார் செய்தால் அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்படும். இப்படி செய்யாமல் எந்த விதமான பணியையும் மேற்கொள்ளாமல் தேர்வாணையம் சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட  வினாத்தாளையே |இந்தாண்டும்  கொடுத்துள்ளது. 


வினாத்தாளை தயாரிக்கும் தேர்வாணயம் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கும் வெங்கடேசன் அவர்களே இதற்கு முழுகாரணம் என்கிறார்கள் அங்குள்ள  அதிகாரிகள்.  

இதன் தொடர்பாக  நடவடிக்கை பாயுமா என்ற கேள்விக்கு முன்பு தேர்வுக்கு தேர்ச்சிபெற பணம் வாங்கிய பிரச்சனையைப் போலவே தற்போதும்  மேலிடத்தில் இருக்கும் அதிகாரிகள்  செய்யும் தவறுகளுக்கு வெளியில் வந்தால் கீழ் உள்ள அதிகாரிகளை தண்டிக்கப்படும் நிலையில்  தற்போது எந்த அதிகாரியை வெட்டப்போகிறார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். 

 

தொடர்ந்து அண்ணா பல்கலைகழகத்தில் பல பிரச்சனை வந்துக்கொண்டு இருக்கம் பட்சத்தில் தற்போது இந்த பிரச்சனை இன்னும் சர்ச்சைக் குள்ளாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்...” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Anna University professors say they will struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும், மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழளளங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ரூட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட. 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம் (டீனிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.