Advertisment

சூரப்பா மீது புகார்- விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு!

anna university vice chancellor tamilnadu government

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு.

Advertisment

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

tamilnadu goverment Vice-Chancellor of Anna University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe