Skip to main content

அண்ணா பல்கலைக்கழக  நியமன மோசடிகள்! சிக்குகிறார்கள் 135 பேராசிரியர்கள்!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

பல்கலைக்கழக விதிகளுக்குப் புறம்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 135 பேராசிரியர்களின் நியமனங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.  ரத்து செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம் பல்கலைக்கழக வட்டாரங்களில் பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

Anna University nomination! 135 Professors!


கடந்த 2007-ஆம் ஆண்டு நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு அண்ணா  பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட மாவட்டங்களில் இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகங்களை  கடந்த 2012-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக  இணைக்கப்பட்டன. அப்படி இணைக்கும் போது  பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனங்களும் நடந்தன. ஆனால், அந்த நியமனங்கள்  முறையாகவும், விதிகளின்படியும் நடைபெறவில்லை என பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் புகார்கள்  எழுந்தன. அந்த குற்றச்சாட்டுகள் மூலம் பல்வேறு ஊழல் விவகாரங்களும் அம்பலமானது.  உடனே அந்த நியமனங்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி  ஆனந்தகுமார் தலைமையில்  5 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த  2017,  ஜூலையில் அமைக்கப்பட்ட அக்குழுவின் உயரதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டது. 

 

Anna University nomination! 135 Professors!


அந்த குழு நடத்திய விசாரணையில், பல்கலைக்கழக இணைப்பின் போது (2012)  நடைபெற்ற 135 பேராசியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நியமனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதையும் முறைகேடுகள் நடந்திருப்பதையும்  கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து,  அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் 16 உறுப்பு பொறியியல்  கல்லூரிகளில் தற்போது  பணிபுரிந்து வரும் அந்த பேராசிரியர்களின் பட்டியலையும் தயாரித்தது அக்குழு. 

மேலும், இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அக்குழுவின் அறிக்கையில், தகுதியில்லாத பேராசிரியர்கள் நியமனம், இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை, பணியிடங்களில் கூடுதலாக ஆட்கள் சேர்ப்பு, நியமனங்களில் விதிமுறை மீறல்கள்  உள்ளிடவைகள் 135 நபர்களின் நியமனத்தில் நடந்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவறு செய்துள்ள  135 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கைப் பாயும் என பல்கலைக்கழக வட்டாரத்தில் தகவல்கள் பரவியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.