/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras5633_35.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாக, பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போதுமான பேராசிரியர்கள் இல்லாததால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்தது. இதையடுத்து மாணவர் சேர்க்கையைஏ.ஐ.சி.டி.இநிறுத்தி வைத்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ANNA UNI (1)_6.jpg)
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இமுடிவை எதிர்த்து, பொறியியல் கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று (20/10/2020) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்திவைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)