அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவைச்செயலாளராக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நியமித்து ஓபிஎஸ்- இபிஸ் அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பணிகளை கவனிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழு கலைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் பொறுப்பில் இருந்து எஸ்.டி.கே.ஜக்கையன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் அண்ணா தொழிற்சங்க பேரவை குழுவின் பொறுப்புகளில் இருந்து யு.ஆர். கிருஷ்ணன், சங்கரதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் பொறுப்பில் தாடி மா.ராசு தொடர்ந்து செயல்படுவார். இவ்வாறு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.