பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு பல்வேறு கட்சியினரும் மாலையில் அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.