Skip to main content

“அண்ணாவும் எம்ஜிஆரும் இப்படியா கட்சி நடத்தினார்கள்” - ஓபிஎஸ் பேட்டி

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 "Anna and MGR ran a party like this" - OPS interview

 

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தேதியை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் இருந்தார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''திருந்து திருந்து என்று சொல்கிறோம். நாங்கள் திருந்தமாட்டோம். இப்படித்தான் மூர்க்கத்தனமாக இருப்போம் என்று சொல்கிறார்கள். அறிஞர் அண்ணா இப்படியா கட்சி நடத்தினார். எம்ஜிஆர் இப்படியா கட்சி நடத்தினார். ஜெயலலிதா இப்படியா கட்சி நடத்தினார். அதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு 66,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வி பெறுகிறது என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர் பொறுப்பேற்று நான் தான் முதலமைச்சர்; நான் தான் எல்லா வேட்பாளரையும் தேர்வு பண்ணுவேன்; உள்ளாட்சித் தேர்தல்; சட்டமன்ற தேர்தல்; நாடாளுமன்ற தேர்தல் எல்லாவற்றையும் நானே முடிவு செய்வேன் என்றார்.

 

எங்கள் தொகுதியில் கூட அதாவது தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர மற்றவர்கள் எல்லாரையும் அவர்களே போட்டார்கள். 39 இடத்தில் போட்டியிட்டு ஒரே இடத்தில் மட்டும் தான் ஜெயித்தோம். நாட்டு மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். அதனால் தான் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான தீர்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் எங்கு போனாலும் எதிர்ப்பு அலை அவரை நோக்கிப் பாயும். அந்த நிலை உருவாகி இருக்கிறது. அதை நாங்கள் உருவாக்கவில்லை அவரே உருவாக்கிக் கொள்கிறார். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவருக்கு எதிராக உருவாகி இருக்கும் எதிர்ப்பு அலை அவரால் உருவாக்கப்பட்டது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.