Skip to main content

எம்.இ பொறியியல் படிப்புக்கு போட்ட கேட்! மாணவர்கள் சாக்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் எம்.இ. பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்களை தேர்வுசெய்து வந்த நிலையில் தற்போது இதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

k

 

டான் சென்ட்  கட் ஆப் என்பதை தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலின் படி கட் ஆஃப் அடிப்படையில் மதிப்பெண்களுக்கு  முன்னுரிமை வழங்கப்பட்டு,டான் செட் கவுன்சி லிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். அப்படி அழைக்கப்படும் மாணவர்கள் தனக்கு தேவையான கல்லூரியை தேர்வு செய்து கொள்வார்கள் .  

 

இந்த நிலையில் எம்.இ பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் டான் சென்ட் மூலமாக மாணவர்களை தேர்வு செய்து கொடுப்பார்கள். அதே போல ஐ.ஐ.டி நிறுவனமான கேட் மூலம் தேர்வுசெய்து கொடுப்பார்கள்.  இதில் டான் சென்ட் தேர்வு போக மீதமுள்ள இடத்திற்கு கேட் மூலம் வருகின்ற மாணவர்கசேர்க்கைக்கு அழைப்பார்கள். ஆனால் தற்போது அது உல்டாவாக மாறியுள்ளது.

 

கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்சென்ட் நீக்கப்பட்டு மத்திய அரசு நடத்தும் கேட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று வருபவர்கள் போக மீதமிருந்தால் இந்த அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு செய்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும். அண்ணாபல்கலைக்கழத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வியும், ஐ.ஐ.டி படிக்கும் மாணவர்களின் கல்வியின் தரம் வேவ்வேறானவை இப்படி இருக்கும் நிலையில் கேட் மூலமாக தேர்வு செய்யப்படுவர்கள் குறைவாகவே இருப்பார்கள், அதிலும் குறிப்பாக தாங்கள் விரும்பிய கல்லூரியில் பயிலமுடியாது முழுமைாக நீட்டை போன்று இதிலும் கையாண்டுள்ளனர்.  

 

இது தொடர்பாக பேசிய மாணவர்கள் எம்.இ பொறியியல் படிப்புக்கான இரண்டுமாதங்களுக்கு முன்பாகவே டான்சென்ட் மூலமாக தேர்வு எழுதியுள்ளோம். அதற்கான தரப்பட்டிலை 22.08.19 தேதி வியாழன் கிழமை அன்று வெளியிட்டுள்ளனர். ஆனால் இது மூலமாக எந்த பயனுமில்லை தமிழக கல்லூரியில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை கிடையாது,  என்பது முழுமையாக அநீதி என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்...” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Anna University professors say they will struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும், மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழளளங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ரூட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட. 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம் (டீனிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.