Skip to main content

ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம்!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டியூஜே சார்பில் தேசத்திற்காக உயிரிழந்த இராணுவ வீரர்களின் வீர மரணத்திற்காக அஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.

 

 Anjali rally for soldiers

 

இந்த மெளன ஊர்வலத்தை மாநில துணை பொது செயலாளரும், மாவட்ட தலைவருமான இராமகிருஷ்ணன்  தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி  அமைதி  ஊர்வலத்தில்  கலந்து கொண்டனர்.

 

இந்த அமைதி ஊர்வலம் NGO காலனி உழவர்சந்தை அருகே தொடங்கி முக்கிய வீதிவழியாக மாவட்ட அலுவலகம் வந்தடைந்தது. 

 

 

அதன்பின்னர் அலுவலகம் முன்பு தேசத்திற்காக உயிர்தியாகம் செய்த 40 இந்திய ராணுவ வீரர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சங்க வழக்கறிஞர் அருண்பிரசாத் கலந்து கொண்டார். அது போல் மாவட்ட பொருளாளர் குமார், அமைப்பு செயலாளர்குமரேசன், மாவட்ட நிர்வாகிகள் மணி, சிவபாரதி,பாலமுருகன்,முருகன், புருசோத்தமன்,ஒட்டன்சத்திரம் தாலூகா தலைவர் செல்லதுரை, மற்றும் வெங்கடேசன், சரவணன், வாசுதேவன், சபீக்,திருப்பதி, சையது, சௌந்தர், சரவணகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்; 6 பேர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Assault on Sub-Inspector of Police; 6 people arrested

விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியில் கோவிலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதனை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை அங்கு இருந்த சிலர் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செஞ்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  இருதரப்பு மோதலை தடுக்க முயன்றார். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதோடு அவரது சட்டையையும் கிழித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை அழைத்துச் சென்று செஞ்சி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் அதிகாரியை தாக்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.