Skip to main content

வெடிவைத்து வேட்டையாடப்படும் விலங்குகள்!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

நெல்லை மாவட்டத்தின் பத்தமடைப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், சொந்தமாக 50 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை இவர் தனது ஆடுகளைப் பத்தமடைப் பக்கம் உள்ள மலையடிவாரத்தின் இடைஞ்சான்குளமருகே மேய்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள குளத்தில் அவைகளை தண்ணீர் குடிக்க விட்டுள்ளார். அந்தச் சமயம் திடீரென பலமான வெடிச்சத்தம் கேட்டதுடன் ஒரு ஆடு தலை சிதறிப்  பலியானது. பதறியபடி வந்து பார்த்த மாரியப்பன், ஆடு வெடிகுண்டு வைக்கப்பட்ட மாம்பழத்தைத் தின்றதால் தலைசிதறியது தெரியவர, போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.


மேலும் தகவல் அறிந்த வனத்துறையின் களக்காடு முண்டந்துறை வனக்காப்பாளர் இளங்கோ, சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார். தொழில் போட்டி காரணமா அல்லது வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் மாம்பழத்தில் வெடிவைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார். லாக்டவுண் காரணமாக மக்கள் வீடுகளில் பூட்டப்பட்டு அடைபட்டுக் கிடக்கின்றனர். தொழில், வருமானமில்லை. ஆள் நடமாட்டமின்மையால் வனவிலங்குகளான காட்டுப்பன்றி, மிளா போன்ற விலங்குகள் இரை தேடி இங்கு வருகின்றன. அவைகளை வேட்டையாடும் மர்ம கும்பல் மாம்பழத்தில் வெடிகுண்டு வைத்து தலைசிதற வெடிக்கவைத்து, சாகடித்துப் பிடிக்கின்றனர். அதன் மாமிசத்தைப் பங்குப் போட்டு விற்பனையும் நடக்கிறது  என்றும் சொல்கிறார்கள் அப்பகுதியினர்.


கடந்த சிலமாதங்களுக்கு முன்பு கேரளாவின் மலப்புரம் காட்டில் வெடிகுண்டு வைத்த அன்னாசிப்பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை ஒன்று தலைவெடித்து உயிரிழந்ததும் கவனிக்கத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய இருவர் கைது

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

 Two arrested for stealing a goat on a two-wheeler

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாலை வேளையில் வந்த இருவர் ஆட்டை திருடிச் சென்றதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அவருடைய தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அத்தனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டை திருடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெண்ணந்தூர் காவல் நிலைய போலீசார் சர்மா, லோகேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.