Skip to main content

பதாகை வைத்து வெளிப்படுத்திய இளைஞர்களின் கோபம்- கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 20/05/2018 | Edited on 20/05/2018

தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி பிரதான சாலை ஓரங்களில் உள்ள  டாஸ்மாக் கடைகளை அகற்றினாலும் அந்த கடைகளை கிராமங்களுக்குள் வைத்து அரசு வருமானத்தை பெருக்கி வருகிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை மீறி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறுபடியும் கடந்த மாதம் பல கடைகளை நீதிமன்றமே மூடியது.

 

கடைகள் மூடப்பட்டாலும் கடைகள் இருந்த இடத்தில் மட்டுமின்றி பெட்டிக்கடைகள் வரை மது விற்பனை அமோகமாக நடக்கிறது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தமிழக அரசு மது விற்பனையை தடுக்க எந்த உத்தரவும் இல்லை என்று சொல்லிவிட்டு மாதா மாதம் மாமூல் வசூலை கவணித்து வருகிறது.

 

tasmak

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பெரியாளூர் கிராமத்தில் ஒரு பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. அந்த கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் வரை புகார் கொடுத்தனர். அதன் பிறகு அருகிலேயே அரசு விதிகளுக்கு புறம்பாக திடீர் கொட்டகை அமைத்து டாஸ்மாக் கடையை தொடர்ந்தார்கள். 

 

மீண்டும் அப்பகுதி இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. அந்த கடையை மூடுங்கள் என்று பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அதனால் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் பெரியாளூர் விலக்கு சாலையில் பெரியாளூரில் நடுநிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் என்ற வழிகாட்டி பதாகையை வைத்துள்ளனர். அந்த பதாகையில் பள்ளி மாணவர், அலுவலர், விவசாயி அனைவரும் மதுவோடு இருப்பது போன்ற படமும் வைத்துள்ளனர். இந்த பதாகை வைத்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் எந்த அதிகாரியும் டாஸ்மாக் கடையையும் அகற்றவில்லை. அந்த வழிகாட்டி பதாகையையும் அகற்றவில்லை. இந்த வழியாகத்தான் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மது விலக்கும் துறை அதிகாரிகளும் போய் வருகிறார்கள்..

இளைஞர்களின் கோபம் வழிகாட்டி பதாகையாக நிற்கிறது ஆனால் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவில்லை என்கின்றனர் ஊர் மக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.