Skip to main content

ஆந்திர போலீசாரை சுற்றி வளைத்த மக்கள்: திண்டிவனம் அருகே பரபரப்பு

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 


திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவர் சந்தைமேட்டில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
 

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சென்னூர் டவுன், கடம் வீரபிரம்மையா என்பவரிடம் ரூபாய் 12 லட்சத்துக்கு நெல் கொள்முதல் செய்திருந்தார் ரகமத்துல்லா. அதற்கு உண்டான பணத்தில் ரூபாய் மூன்று லட்சத்தை மட்டும் ரகுமத்துல்லா கொடுத்துள்ளதாக சென்னூர் டவுன் போலீசில் கடம் வீரபிரம்மையா புகார் அளித்ததின் பேரில் ஆந்திர போலீசாரான ராம நரசிம்மலு மற்றும் வெங்கட்ரமனா ஆகிய இருவர் துணையுடன் மொத்தம் 9 பேர் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் உள்ள ரகமத்துல்லா வீட்டிற்கு காரில் வந்துள்ளனர். 


  Tindivanam


இவர்கள் அனைவரும் ரகமத்துல்லா வீட்டில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவரை சட்டையைப் பிடித்து அடித்து இழுத்து சென்று காரில் ஏற்றினர். உடனே அந்த கும்பல் ரகமத்துல்லாவை தாக்கியதை அடுத்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த 9 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் அவர்களைத் தாக்க முற்படும் சூழல் ஏற்பட்டது. 


அப்போது ஆந்திர போலீசார் நாங்கள் ஆந்திரா போலீஸ் என்று கூறியுள்ளனர். உடனே பொது மக்கள் அவர்களிடம் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து உறுதி செய்தவுடன் ரோசனை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

Tindivanam

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 9 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் கொடுக்கல் வாங்கலில் இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். எனவே இரு தரப்பு கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட தகவல்கள் தெரிந்த திண்டிவனம் லோடு ஏற்றி வந்தலாரி டிரைவரை அழைத்து வர போலிசார் அறிவுறுத்தியதுடன் அவர்கள் வந்த இரு கார்களில் ஒன்றை போலீசார் தங்கள் வசம் வைத்துக் கொண்டு ஒரு காரை மட்டும் கொடுத்து அனுப்பி நாளை அந்த லாரி  டிரைவருடன் காவல் நிலையத்திற்கு வர வேண்டும். அப்பொழுது விசாரணையை நடத்தி கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தனர்.

 

Tindivanam



இதனை தொடர்ந்து அவர்கள் 9 பேரும் திரும்பிச் சென்றுள்ளனர். வெளி மாநிலத்திலிருந்து போலீசார் வேறொரு மாநிலத்திற்கு விசாரணைக்காக செல்லும் போது அப்பகுதி போலீசாரிடம் தகவல் அளித்து, அதன் பின்னர் அவர்கள் உதவியுடன் செல்வதே நடைமுறை. ஆனால் இவர்கள் அந்த நபரை உள்ளூர் போலீசாரிடம் தகவல் அளிக்காமல் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் அங்கு சென்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதேபோன்று அப்பகுதியில் ஒரு நபரை கடத்திச் சென்று அவரிடம் வட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்த பின்னரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 

 கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஆந்திர போலீசார் உதவியுடன் ஒருவரை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.