Skip to main content

வன்னியர் சொத்துகளை அபகரித்தோம் என்று திமுகவால் நிரூபிக்க முடியுமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

 

வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை நாங்கள் அபகரித்தோம் என்று குற்றம் சாட்டும் திமுக அதை நிரூபிக்கத் தயாரா? என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, சேலத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 6, 2019) இரவு பரப்புரை செய்தார். கொண்டலாம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

 

an


அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மத்தியில் மோடியின் நல்லாட்சி தொடரும். சாதாரண விவசாயி என்ற நிலையில் இருந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் இந்தியாவிலேயே சிறந்த திட்டமான கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் பாடுபட்டு வருகிறார். 


கோதாவரி திட்டத்தை நிறைவேற்றினால் மேட்டூர் அணையில் எப்போதும் தண்ணீர் இருக்கும். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலை வரும். திமுகவில் கட்டப்பஞ்சாயத்து, பெண்களை கடத்துவது, கொலை, கொள்ளை, வழிப்பறி, அராஜகம் என கூட்டணியாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது, அதிமுக கூட்டணியால்தான் வழங்க முடியும். 


மேடைதோறும் கொச்சையாக, தரம் தாழ்ந்து பேசி வருபவர் ஸ்டாலின். திருமாவளவன், நிச்சயமாக மக்களால் தோற்கடிக்கப்படுவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இப்போதே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என சிந்தித்து பார்க்கவும்.


திமுக கூட்டணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன், இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளார். தமிழகத்தில் ஏன் முதலீடு செய்யவில்லை? இதுகுறித்து ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் ஆகியோர் என்ன பதில் சொல்லப் போகின்றனர்? இனிமேல் ஈழ பிரச்னை குறித்து திமுக கூட்டணியினர் பேச தகுதியில்லை. திமுகவில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியாக நடக்காமல், ஒரு நிறுவனமாக செயல்படுகிறது.


திமுகவில் கலைஞரின் குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுகதான். நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின். இப்போது அதை ரத்து செய்வதாக நாடகம் ஆடி வருகிறார். ஸ்டெர்லைட் நிறுவனத்தை துவக்கி வைத்தவர் கருணாநிதி. காவிரி பிரச்னைக்கு காரணமானவர்கள் திமுகவினர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின். ஆனால் இப்போது இந்த திட்டத்தை ரத்து செய்வதாக மேடைக்கு மேடை பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். 


வன்னியர் சொத்துகளை அபகரித்துவிட்டதாக எங்களைப் பார்த்து ஸ்டாலின் பொய்யாக பரப்புரை செய்து வருகிறார். எனது குடும்பத்தினரின் அனைத்து சொத்துகளையும் வெளிப்படையாக கொண்டு வந்து கொடுக்கிறேன். அதில் ஒரு சதுர அடியாவது வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை அபகரித்திருப்பதாகக் கண்டறிந்து நிரூபிக்க தயாரா? அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் திமுக தலைவர் பதவியை துறக்க தயாரா? திமுக தலைவர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்றுதான் அந்தக்கட்சியில் இருப்பவர்களே விரும்புகின்றனர். 
 

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.