Skip to main content

கொள்ளை அடிக்கிறார்களே தவிர ஆட்சி செய்யவில்லை! - அன்புமணி பேச்சு!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
anbumani


பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வைகை ஆறு வால்பாறை கிராமத்திலிருந்து வைகை ஆற்றை காப்போம், வறட்சியை விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு வைகை ஆறு விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கினார்.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் துவக்க நிகழ்வாக வைகை ஆறு உருவாகும் இடமான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலையின் அடிவாரமான வால்பாறைக்குச் சென்று அப்பகுதியில் ஓடக்கூடிய மூலவகை ஆற்றுக்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது அப்பகுதி மக்களிடம் ஆற்றின் நீர் வரத்து பற்றியும், குறைகளையும் கேட்டறிந்த அவர் அங்குள்ள அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு விட்டு மக்களுக்கும் மரக்கன்றுகளை கொடுத்தார்.

அதன் பின் அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியவர், வைகை ஆறு பயணிக்கும் பாதைகளான வருசநாடு, மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வழியாக வந்து வைகை அணையை பார்த்து விட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் நிலைக்கோட்டைக்கு வந்தார். அப்பொழுது பேசிய அன்புமணியோ...

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும். மைனாரிட்டி அரசு தான் இந்த எடப்பாடி அரசு. சாதுமணல், கிரணைட் மூலம் கொள்ளை அடிக்கிறார்களே தவிர ஆட்சி செய்யவில்லை. ஆட்சி என்றால் நிர்வாகம் சரியில்லை எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. அதுபோல் தமிழகத்தில் எல்லா உரிமையும் இழந்து நிற்கிறோம். தொடர்ந்து இந்த அரசு தமிழகத்தை ஆளுவது நல்லதல்ல. இருக்கிற வரைக்கும் கொள்ளை அடித்து விட்டு போகலாம் என்று நினைக்கிறார்கள்.

மத்தியில் பிஜேபி கூட்டணி இல்லை என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு சின்ன பிள்ளையிடம் கேட்டால் கூட பிஜேபி வழியில் இந்த எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்லுவார்கள் தற்பொழுது மக்களை எடப்பாடி சந்தித்து வந்தாலும் எடப்பாடி உள்பட அனைவரும் வரக்கூடிய தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள். வைகையை போல் காவேரி தாமிரபரணி ஆற்றுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறேன் என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வன்மையாக கண்டிக்கிறேன்” - மறுப்பு தெரிவித்த தங்கர் பச்சான்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
thankar bacchan election candidate issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க இடம் பெற்ற நிலையில், அக்கட்சியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.  இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதே வேளையில் அவர் போட்டியிடவில்லை என ஒரு தகவல் உலா வந்தது.

இந்த நிலையில், அத்தகவல் குறித்து தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் எனக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.  

Next Story

வெளியான பா.ம.க. வேட்பாளர் பட்டியல்; இடம் பெற்ற திரைப்பட இயக்குநர்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Release of pmk Candidate List

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது. இந்தநிலையில் பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன்படி, அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.