Skip to main content

நெல்லை கடையநல்லூர் காட்டில் உலாவும் அனகோண்டாக்கள்...!!

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

ரத்தத்தை உறையவைக்கும் அடர்ந்த அமேசான் மற்றும் ஆப்ரிக்ககாடுகளில் திரிவதும், அபூர்வமானதும் பயங்கரமான ஆள் விழுங்கி மலைப்பாம்பு அனனோண்டா. அதுபற்றிய மேற்கத்திய திரைப்படம் வெளி வந்தபோதுதான் அதன் மகாபயங்கரம் கண்டு மனிதகுலம் அச்சத்தில் உறைந்தது. தன் எதிரி எவ்வளவு தூரம் ஓடினாலும், உச்சத்திற்குப் போனாலுமே நொடியில் வளைத்து விடக் கூடிய பல அடிகள் நீள சைசும், பனைமரத்தின் அடிப்பாக கனமும் கொண்டவைகள் அனகோண்டாக்கள்.

 

snake

 

அந்த சைஸ் அனகோண்டா நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் மலைக்காடுகளில் திரிவதை தற்செயலாக அங்குசென்ற இளைஞர்கள் அதைக் கண்டு பதறியிருக்கிறார்கள். அப்படியே அதை தங்களின் செல்லின் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

 

கடையநல்லூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சிமலை உள்ளது. அதன் அடிவாரத்திலிருப்பது பெரியாற்றுப்படுகையின் பக்கமுள்ளது  கல்லாறு கிராமம். இந்தக் கிராமத்தின் மேல்புறம் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பீட்டில் வரும் மூங்கில் காடு உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியைக் கொண்ட அடர்ந்த இந்தக் காட்டில் தேக்கு மரங்கள் அடுத்து மான், மிளா, காட்டெருமைகள், பாம்புகள் போன்ற வனவிலங்குகளும் உள்ளன.

 

snake

 

இந்த பீட்டின் அடிப்பகுதியில் கல்லாற்றைச் சேர்ந்தவர்கள் விவசாயம் செய்ய, குளிப்பதற்காகச் செல்வதும் உண்டு. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் பகுதியின் இளைஞர்கள் சிலர். கல்லாறு மலைக்கு  சென்றுள்ளனர். அது சமயம் அவர்கள் அங்குள்ள ஓடையைக் கடக்கும் போது சுமார் 20 அடி நீளம் கொண்ட கணிப்புக்கும் எட்டாத கனம் கொண்ட சைசில் மலைப் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்து பின் வாங்கியுள்ளனர். பின் அதை தங்களின் செல் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சில நிமிடங்களுக்குப் பின்னர், தலையும், வாலும் தெரியாத அந்த மலைப்பாம்பு நெளிந்து செடிப் புதருக்குள் மறைந்திருக்கிறது.

 

snake

 

இந்தக்காட்சி நண்பர்கள் மூலமாக வாட்ஸ் அப்பில் பரவியதையடுத்து அலர்ட் ஆன வனத்துறையினர் கல்லாறு மற்றும் மலையடிவாரக் கிராமங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். நாங்கள் ஓடைப் பக்கம் வரும் போது சாலையில் ஸ்பீடு பிரேக்கர் தான் இருக்கிறதோ என்று சந்தேகப்பட்டு நின்று கவனித்தபோது பளபளப்பான அது நெளிந்தது தெரிய வந்தபோது தான், மலைப் பாம்பு என்று உணர்ந்து பதறினோம் பிறகு தைரியமாக அரிவாளுடன் பின் தொடரும் போது அது புதருக்குள் போய் விட்டது. ஆங்கிலப் படங்களில் பார்க்கிற அச்சு அசல் அனகோண்டா பாம்பு போன்று தெரிகிறது. அருகில் ராஜநாகம் ஒன்று படமெடுத்ததையும் வீடியோ செய்துள்ளோம் என்கிறார்கள் இளைஞர்கள் பீதி விலகாமல். அனகோண்டாக்களையும், ராட்சத மலைப் பாம்புகளையும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் அமேசான் காடுகளுக்கு நிகராகியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.