Skip to main content

அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை: வீடியோ ஆதாரத்தை தாக்கல் செய்தது தமிழக அரசு!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018


அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதாவை தன் தாய் என கூறி மரபணு சோதனை நடத்தவும், ஜெயலலிதாவின் உடல் தோண்டி எடுத்து வைணவ முறைப்படி சடங்கு நடத்த அனுமதிக்க கோரி பெங்களுரை சேர்ந்த அம்ரூதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரனைக்கு வந்த போது, "அம்ரூதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை தொடர்ந்து தனக்கு உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்றார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரி இருந்தார். ஜெயலலிதாவுடன் ஜெயக்குமார், சைலஜா ஆகியோர் உடன் பிறந்தவர்கள். சந்தியாவின் கணவர் இறந்த பின்புதான் பிறந்த சைலஜா பெங்களூரில் வளர்ந்தார். அம்ருதாவை சைலஜாதான் ரகசியமாக வளர்த்தார். சைலஜா இறந்தபின்பு அவரது கணவர் சாரதி இறக்கும் தருவாயில்தான் ஜெயலலிதா தான் தாய் என அம்ருதாவிடம் கூறினார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய கூட தேவையில்லை, வேண்டுமென்றால் அம்ருதா ரத்தத்தையும், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளாக இருக்கும் தீபா, தீபக் ஆகியோரின் ரத்த மாதிரிகளை கொண்டு மைட்டோ காண்டிரியா முறையில் ஹைதராபாத்தில் டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட்டால் உண்மை வெளிவரும் என்று கூறி வாதங்களை முடித்தார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ஜெயலலிதா தனது சகோதரி போட்டியளித்த சைலஜா மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே அவதூறு தாக்கல் செய்துள்ளார். அம்ரூதாவின் மனுவில் கூறப்பட்ட அனைத்தும் கற்பனையானவை. சொத்துக்களை பறிக்கும் நோக்குடன் தொடரப்பட்டது.

 

 

’1980 ஆக்ஸ்ட் மாதம் அம்ரூதா பிறந்தாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூருவில் பிலிம்பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டதற்கான ஆதாரம் உள்ளதாக வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்தார்’. சமூகத்தில் மதிப்பு மிக்க தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. இறந்த தலைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என வாதிட்டார்.

1996ஆம் ஆண்டு முதல் 2016 வரை பல தருணங்களில் ஜெலலிதாவை சந்தித்தாக கூறும் அம்ரூதா அதற்கு ஆதராமாக ஒரு புகைப்படத்தை கூட தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் அம்ரூதா கூறும் அனைத்து சாட்சிகளும் இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவின் சொத்துக்களை அடையவே கற்பனையான சோடிக்கப்பட்ட இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்தில் குற்றம்சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஜெயலலிதா மரணம், சைலஜா சகோதரி என்பதும் கேள்விக்குறி, அம்ருதாவுக்கு ஆதாரமான சாட்சியங்களும் கேள்விக்குறி, என இப்படி எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்த நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரிகள் பின்னாலேயே இருந்துள்ளார்கள்” - உதயநிதி ஸ்டாலின்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

"The enemies were behind" Udayanidhi Stalin

 

“ஜெயலலிதா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். ஆனால் அவருக்குப் பின்னாலேயே எதிரிகள் இருந்துள்ளனர்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம். தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்ன நிலைமை இருந்தது. அதிகாரக் குவியல். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை என்றார். இறுதியில் அவர்களது எதிரிகள் எல்லாம் அவர்கள் பின்னாலேயே இருந்துள்ளார்கள். இதுதான் அதிகாரப் பரவலுக்குமான அதிகாரக் குவியலுக்குமான வித்தியாசம்” என்றார்.

 

 

Next Story

நடராஜன் போட்ட திட்டம்; ஜெயலலிதா, சசிகலாவை நடுங்க வைத்த செரினா..!

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Natarajan serina case

 

2000ம் காலங்களில் அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய நபர்களாக இருந்தனர். அதிமுகவை தாண்டி தமிழ்நாடு அரசியலிலும் அவர்கள் பேசுபொருளாக இருந்தனர். இதற்கு இடையில் இளம் வயது பெண்ணான செரினா எப்படி இவர்களுக்குள் வருகிறார். நடராஜனுடன் எப்படி அறிமுகமாகுகிறார். நடராஜனுடன் அவர் பழகுகிறார் என்பதால் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் வந்தது? என்பவற்றை எல்லாம் விளக்கி பேசினார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.

 

இது குறித்து அவர் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி: “ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் எனும் பெரும் அதிகார மையத்திற்குள் நான்காவதாக நுழைந்த பெரும் பிம்பம் செரினா. நடராஜன் அரசியலில் நேரடியாக வெளியாகவில்லை என்றாலும், டெல்லியில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் நடராஜன் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பார். அந்த அதிகார மையத்தில் இருந்த மூவரும் அச்சப்பட்டது செரினாவை பார்த்துதான். 

 

செரினாவின் தந்தை பாண்டி தேவர் இராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் இராணுவ அதிகாரி என்பதால் அவருக்கு அவ்வப்பொழுது பணியிட மாறுதல் நடந்துகொண்டே இருக்கும். செரினா மிலிட்டிரி பள்ளியில் படிக்கிறார். இதனால் அவருக்கு 9 மாநில மொழிகள் தெரியும். நரசிம்மராவ், ஜெயலலிதா ஆகியோரைவிட அதிக மொழிகளைத் தெரிந்தவர். சசிகலாவுக்கு ஒன்னுமே தெரியாது. 

 

Natarajan serina case

 

இந்த செரினா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அப்போது ஒரு பொதுநிகழ்ச்சியில் நடராஜன் செரினாவை சந்தித்து பிறகு செரினாவை அவரது உதவியாளராக நியமித்துக் கொள்கிறார். இந்த உறவு நடராஜனின் கருவை செரினா சுமக்கும் அளவிற்கு நெருக்கமானது.  செரினாவை நடராஜன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் அம்மாவிடம், “இது உன் இரண்டாவது மருமகள்” என்று சொல்கிறார். அவரும் செரினாவை ஆசிர்வாதம் செய்கிறார். 

 

இந்த தகவல் சசிகலா, ஜெயலலிதாவுக்கு தெரியவந்து ஆத்திரம் அடைகின்றனர். அவர்கள் ஆத்திரமடைய இன்னொரு காரணம், நடராஜன் செரினாவை டெல்லி அரசியலுக்கு அழைத்துச் செல்ல கன்சிராம், மாயாவதி மூலம் காய் நகர்த்தினார். மாயாவதியிடம் இவரை அறிமுகப்படுத்தி செரினாவின் பன்மொழி புலமை பற்றி சொன்னதும் மாயாவதிக்கு செரினாவை பிடித்துப்போய் செரினாவை தன் உதவியாளராக வைத்துக்கொள்வதாகவும் எம்.பி. ஆக்குவதாகவும் சொன்னார். 

 

அப்படி அவர் எம்.பி. ஆனார் என்றால், டெல்லியில் பெரும் அரசியல் லாபியை உருவாக்கிக்கொள்வார். அனைத்து மாநில அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் அவருக்கு பழக்கமாவார்கள். அப்படி ஒரு லாபி உருவானால் சசிகலாவின் அரசியல் காணாமல் போய்விடும். இதனால் செரினா மீது சசிகலாவுக்கு கடுங்கோபம். அதுமட்டுமல்லாமல், செரினாவுக்கு குழந்தை பிறந்தால் அது சட்டப்படி நடராஜனின் வாரிசு. இந்து திருமண சட்டப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்வது அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் மனைவிக்கு பிறக்கும் குழந்தை சட்டப்படி வாரிசுதான். அப்படி வாரிசு வந்தால், வாரிசு இல்லாத சசிகலாவின் சொத்துக்களான சசி எண்டர்பிரைசஸ், மிடாஸ், கொடநாடு உள்ளிட்ட அனைத்தும் கைமாறும். 

 

இந்த கோபங்கள் தான், செரினா 100 கிலோ கஞ்சா வழக்கில் சிக்கி எட்டு மாதங்கள் சிறையில் அடைபடக் காரணம். அதேநேரம், அவர் சிறையில் இருந்தபோது ஒரு பெண் காவலர் செரினாவை கடுமையான சித்திரவதை செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரின் கருவை சிறையிலேயே கலைக்கிறார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்த எந்த அரசியல் தலைவர்களும், “ஒரு அப்பாவி பெண்ணை ஏன் இப்படி சித்திரவதை செய்கிறீர்கள்” என அறிக்கை கூட விடவில்லை. 

 

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கற்பக விநாயகம் செரினாவை தனியாக அவரது சேம்பருக்கு அழைத்து வாக்குமூலம் வாங்குகிறார். அப்போது, கலைஞர் மட்டுமே, “நீதிபதி அல்ல, நீதி-பாதி” என முரசொலியில் எழுதுகிறார். உடனே நீதிபதி கற்பக விநாயகம் இந்த வழக்கில் இருந்து வெளியேறுகிறார். பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது.”

 

உச்சநீதிமன்றத்தில் செரினாவின் வழக்கு என்ன ஆனது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.