Skip to main content

சூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை! 

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

சூடான் நாட்டில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் ஆலை ஒன்றில் 200-க்கும் அதிகமானோர் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினா்,  ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.  இறந்தவர்களில் 18- பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 6 பேர் தமிழர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Among those Sudan country incident

அந்த 6 தமிழர்களில் ராஜசேகர் என்பவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருவன் மகன் ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய ராஜசேகர் தீ விபத்தில் பலியாகி உள்ளார். 36 வயதான ராஜசேகர், கடந்த 2017- ஆம் ஆண்டில் சூடான் சென்று அங்கு ஹர்டோப் என்னுமிடத்திலுள்ள செராமிக் தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் பணி செய்து வந்துள்ளார்.

Among those Sudan country incident


இந்நிலையில் தான்  நேற்று முன்தினம் எல்.பி.ஜி கேஸ் கசிவின் மூலம் ஏற்பட்ட விபத்தில் ராஜசேகரும் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த ராஜசேகரின் மனைவி கலைசுந்தரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனுக்கு மனு அளித்துள்ளார். அம்மனுவில், 'தனது கணவர் ராஜசேகர் சடலத்தை சொந்த ஊரான மானடிக்குப்பத்தில் நல்லடக்கம் செய்ய ஏதுவாக சடலத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Among those Sudan country incident


வெளிநாடு வேலைக்கு சென்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் ராஜசேகர் உயிரிழந்ததால் அவரின் சொந்த கிராமமான மானடிக்குப்பம் கிரமம்மே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.