Skip to main content

அமமுக பிரமுகர் நிர்வாண நிலையில் கொடூரக் கொலை..! கணவன் - மனைவி கைது

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

ddd

 

அமமுக பிரமுகர் நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் - மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (45). இவர் அமமுகவில் வர்த்தக அணி பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுங்கூர் ஊராட்சியில் உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். 

 

நெடுஞ்சாலைகளுக்குத் தார் விற்பனை செய்வது உள்ளிட்ட பிற தொழில்கள் செய்து வருவதாகவும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களிலும் இவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசித்து வருவதால், 15 நாட்களுக்கு ஒருமுறை மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க ஆலங்குடி வந்து செல்வார். 

 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (16.04.2021) நெடுங்கூர் கிராமத்தில் உள்ள இவரது வீட்டின் கழிவறையில் நிர்வாண நிலையில் கழுத்தும், பிறப்புறுப்பும் அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

அப்போது பாண்டிசெல்வம் வீட்டின் அருகே வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன. கொலையான பாண்டிசெல்வம் வீட்டின் அருகே வசிக்கும் பொன்னம்பலம் (30) லாரி டிரைவர். இவருக்கு சங்கீதா (23) என்ற மனைவி உள்ளார். தனது கணவர் லாரி ஓட்டச் செல்லும்போதெல்லாம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆய்குடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதனை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

 

சங்கீதா தாய் வீட்டிற்கு செல்வது குறித்து பொன்னம்பலம், தனது மனைவி மீது சந்தேகம் அடைந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ''நீங்கள் பணிக்காக வெளியூர் செல்லும்போதெல்லாம் பாண்டிசெல்வம் என்னிடம் பாலியல் சீண்டல் தொல்லை கொடுத்து வருகிறார்'' என கூறி அழுதுள்ளார்.

 

தனது மனைவிக்கு நிகழும் பிரச்சினைக் குறித்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த தனது பெரியப்பா மகன் பசுவராஜ் (30) என்பவரிடம் கூறி பொன்னம்பலம் புலம்பியுள்ளார். இதையடுத்து பொன்னம்பலம், அவரது மனைவி சங்கீதா, பொன்னம்பலம் உறவினர் பசுவராஜ் ஆகியோர் மூவரும் சேர்ந்து, கடந்த 14ஆம் தேதி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பாண்டியனை கத்தியால் கழுத்தை அறுத்தும், ஆணுறுப்பை அறுத்தும் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தனர்.

 

கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் போலீசாருக்கே இந்த விஷயம் தெரியவந்தது. பின்னர் கொலை குறித்து வழக்குப் பதிவுசெய்த சிறுகனூர் போலீசார், பொன்னம்பலம், அவரது மனைவி சங்கீதா, பொன்னம்பலத்தின் உறவினர் பசுவராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னம்பலம் மற்றும் பசுவராஜ் ஆகியோரை துறையூர் கிளைச் சிறையிலும், சங்கீதாவை திருச்சி பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.