Skip to main content

உதவி கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமமுக நிர்வாகி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

ammk executive misbehaved with a young woman who asked for help

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை எம்மா கிழவிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் வின்சென்ட்ராஜ். இவருக்கு 32 வயதாகிறது. இவர், ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மேலும், அந்தப் பகுதியின் அமமுக கட்சியின் எம்ஜிஆர் மன்றச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். இதனால், அந்தப் பகுதியில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட நபராக இருந்து வருகிறார்.

 

இந்நிலையில், வின்சென்ட்ராஜ் வசித்து வரும் தெருவில், இவர் வீட்டிற்கு அருகில் ஒரு குடும்பம் உள்ளது. அந்த வீட்டில் யாரும் இல்லாதபோது, 35 வயதுடைய ஒரு பெண் மட்டும் அங்கு இருந்திருக்கிறார். திருமணமான அந்தப் பெண்ணின் கணவர் உட்பட அனைவரும் வேலைக்குப் போயிருந்ததால், அவர் மட்டும் சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணின் வீட்டில் திடீரென லைட் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். பகல் நேரமாக இருந்தாலும் லைட் இல்லாததால், அந்த வீடே இருண்ட மாதிரி காட்சியளித்துள்ளது.

 

இதனால், அந்த பெண்ணே லைட்டை சரி செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அப்போது, வீட்டிலும் யாரும் இல்லாததால் அக்கம் பக்கத்தில் யாரிடமாவது உதவி கேட்கலாம் என நினைத்து, வெளியே வந்திருக்கிறார். அந்த சமயத்தில், வீட்டுவாசல் வழியாக வின்சென்ட்ராஜ் நடந்து வந்துள்ளார். இதனைப் பார்த்த அந்தப் பெண், அண்ணே... ஒரு சின்ன உதவிணே.. என்றிருக்கிறார். உடனே என்னாச்சிமா எனக் கேட்டு, அருகே வந்துள்ளார் அமமுக பிரமுகர் வின்சென்ட்ராஜ்.

 

அதன் பிறகு தனது வீட்டில் லைட் எரியவில்லை என அவரிடம் கூற, உடனே நான் பாக்குறேன் வாம்மா... எனக் கூறிக்கொண்டே அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் வின்சென்ட்ராஜ். உள்ளே சென்றவர், எந்த லைட்டுமா... என ஆர்வமாக கேட்க, அதற்கு எரியாமல் சிக்கல் செய்த லைட்டை காட்டி அதுதாணே என்றிருக்கிறார். உடனே வீட்டில் யாரும் இல்லையா எனக் கேட்ட அவரின் பார்வைகள், சட்டென்று மாறுவதை அந்தப் பெண் அறிந்து வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முயன்றுள்ளார்.

 

ஆனால், அதற்குள் அவரைப் பிடித்து உள்ளே இழுத்து.. தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார் வின்சென்ட்ராஜ். இதனை கொஞ்சமும் அவரிடம் இருந்து எதிர்பார்க்காத அந்தப் பெண், பயந்து போய் வேகமாக கூச்சலிட்டிருக்கிறார். வேறு யாராவது வந்துவிட்டால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த வின்சென்ட் ராஜ் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

 

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்,  அழுதுகொண்டே தனது கணவருக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால் அவரின் கணவர் பிசியாக வேலை செய்து கொண்டிருந்ததால் ஃபோனை எடுக்கவில்லை. அந்தச் சமயத்தில் தனது தோழி ஒருவருக்கு ஃபோன் செய்து பதற்றத்தோடு நடந்த அனைத்தையும் கூறியிருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அந்தப் பெண், ஆத்திரமடைந்து வின்சென்ட்ராஜிக்கு ஃபோன் செய்து... ஏன் இப்படி பண்ணுன... இதெல்லாம் தப்பு இல்லையா?... அவ வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா என்னாகும் என திட்டியுள்ளார். நடந்த எதையும் அந்தப் பெண் வெளியே சொல்லமாட்டார் என நினைத்திருந்த வின்சென்ட்ராஜ், பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்குள் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு தடுத்துவிட வேண்டுமென நினைத்து உடனே அந்தப் பெண்ணுக்கு ஃபோன் செய்துள்ளார்.

 

அப்போது, நான் உங்கள அண்ணன மாதிரி நெனச்சித்தான்... உள்ளே கூப்பிட்டேன்... நீங்க என்னன்னா... இப்படி பண்றிங்க? இதே உங்க மனைவி, அக்கா, தங்கைங்க கிட்ட யாராவது இப்படி நடந்துக்கிட்டா சும்மா இருப்பீங்களா? எனக் காட்டமாக கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்ல முடியாம திணறியவர், சாரிமா என்னை மன்னிச்சிடு என கெஞ்சியுள்ளார். இந்த ஃபோன் உரையாடலை சாதுரியமாக ரெக்கார்ட் செய்திருக்கிறார் அந்த பெண். மேலும், தொடர்ந்து பேசப் பிடிக்காமல் ஃபோனையும் துண்டித்துள்ளார்.

 

ஆனாலும், அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த அந்தப் பெண், தனது கணவர் வந்தவுடன் நடந்த அத்தனையும் ஒண்ணுவிடாமல் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தார், இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று உடனே புகார் கொடுத்துள்ளனர். பின்னர், உதவி ஆய்வாளர் முகம்மது சபீக், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கிறார். அதனையடுத்து, வின்சென்ட் ராஜை, கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இளம்பெண்ணின் வீட்டிற்குள், நுழைந்து அமமுக நிர்வாகி ஒருவர், பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.