Skip to main content

திருச்சியில் வீடுவீடாக சென்று கபசுரக்குடிநீர் வழங்கிய அமமுகவினர்!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

ammk distributing kabasura powder in trichy corporation

 

திருச்சி மாநகரில் உள்ள 68 வார்டுகளிலும் அமமுகவினர் கபசுரக்குடிநீர், கையுறை மற்றும் முககவசம் ஆகியவற்றை வீடு வீடாக சென்று விநியோகித்துள்ளனர்.

 

திருச்சியில் கரோனா பரவல் உச்சநிலையை அடைந்து வருகிறது. தளர்வு நிலையில், ஆறாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது,  திருச்சி மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கையால் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை.

 

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, இல்லங்களில் கை கழுவுவது என அனைத்து மட்டங்களிலும் அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் காவலர்கள் செவிலியர்கள் நகை, வைர, ஜவுளிக் கடை முதலாளிகள் ஊழியர்கள் என நோய்த்தொற்று பரவிக்கொண்டே வருகிறது.

 

திருச்சி கடைவீதியில் ஒட்டுமொத்தமாக சுமார் 28 தெருக்களை அடைத்து மூன்று வார்டுகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது நிர்வாகம். இந்நிலையில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வீடு, வீடாக வீதி, வீதியாக கபசுரக்குடிநீரை விநியோகிக்கும் நிகழ்ச்சியினை மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நடத்தினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்களில் 65 வார்டுகளிலும் காலையிலேயே வீட்டுக்கு வீடு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் கபசுர குடிநீர் வழங்கினார்கள். கபசுர குடிநீர் கொடுத்தனர். இத்தோடு வெப்பமானி மூலம் உடல்நிலை பரிசோதித்தனர். 

 

இதை அடுத்து ஒவ்வொருவருக்கும் முகக்கவசம், கையுறை வழங்கினர். சைக்கிளின் பின்புறம் கட்டியிருந்த டீ கேனில் வீடு,வீடாக கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் ஸ்டிக்கர் ஒட்டினர். அமமுகவினர் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் 65 வார்டு பொதுமக்களுக்கும் கபசுரக்குடிநீரினை வழங்கினார்கள். ஆயுஷ் அமைச்சகம் சார்பில் சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை, மணப்பாகு போன்ற மருந்துகளையும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆர்வம் போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஒவ்வொரு மாநில அரசுகளும் அமல்படுத்தி வருகின்றன.

 

ammk distributing kabasura powder in trichy corporation

 

ஆனால், கபசுரக் குடிநீரினை வீட்டுக்கு, வீடு கொண்டு சென்று வினியோகம் செய்து மலைகோட்டை மாநகரில் அமமுக கொடுத்து அசத்தினர். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் மாநகரம், பகுதி, வட்டம், கிளை கழகம் என அனைவரையும் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட்டது ஆளும் கட்சியினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.