Skip to main content

கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் அதிமுக- அமமுக மோதல்; பரபரப்பான கும்பகோணம்!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

கும்பகோணம் பகுதிகளில் ஒரு வார காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நடந்து வந்த கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான தேர்தல் அதிமுக, அமமுக கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்ததால் சில இடங்களில் தேர்தலை நிறுத்தியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த ஓட்டுப்பதிவில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஓட்டுப்போட்டு வந்தனர். திடிரென ஓட்டுப்பதிவு நடந்த சங்க அலுவலகம் முன்பு அமமுகவினர் திரண்டனர். பதட்டமானதை உணர்ந்த காவல்துறை காக்கிகளை குவித்தனர்.

ATTACK


காவல்துறை கணித்தது போலவே, " ஓட்டுப்பதிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போலீசார் முன்னிலையிலேயே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து விலகிவிட்டனர்.

பின்னர் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் அதிமுகவினர் ஓட்டுப்பதிவை நிறுத்திவிட்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரியான தமிழ்செல்வி ஓட்டுப்பதிவின் போது கலவரமும் கைகலப்பும் ஏற்பட்டதாலும், தேர்தலை நிறுத்தி வைக்குமாறு அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சார்பில் கடிதம் கொடுத்ததாகவும் மறு தேதி எதுவும் குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.

தமிழகமே தண்ணீர் பிரச்சனையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பள்ளி கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், பாட நூல்கள் வழங்கப்படாமல் மாணவ மாணவிகள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எட்டாவது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது, சம்பா சாகுபடியாவது கைகொடுக்குமா என்கிற கவலையில் விவசாயிகள் கண் கலங்கி நிற்கிறார்கள். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், உள்ளிட்ட திட்டங்களால் டெல்டா பாலைவனமாகா போகிறதோ என்கிற கவலையில் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் களத்தில் குதித்து போராடிவருகிறார்கள். இதையெல்லாம் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாத அதிமுக கூட்டுறவு சங்க தேர்தல்களில் கோஷ்டிப் பூசலை ஏற்படுத்திக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி வருவது பலரையும் முகம் சுளிக்கவே வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.