ஏழை- எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார் ஜெயலலிதா. அதில் இட்லி ஒன்று ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஒன்று ஐந்து ரூபாய், தயிர் சாதம் ஒன்று மூன்று ரூபாய், இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps 01_0.jpg)
இந்த நிலையில் அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps 02.jpg)
அதன்படி இன்று சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவை வழங்கினார். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவை எடப்பாடி பழனிசாமி ருசி பார்த்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps 03.jpg)
சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படுகிறது. பதிவு செய்து அடையாள அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)