style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் வீடற்றவர்கள் மற்றும் சாலையோர மக்கள், தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் உணவுக்காக அம்மா உணவங்களை நாடுகின்றனர். இங்குக் கூடுதலாகச் சமைக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் அருகே உள்ள அம்மா உணவங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.