Advertisment

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா! 

American Muthami University Graduation Ceremony!

Advertisment

உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் பெருமையும் பூரிப்பும் அடையும் அளவிற்கு சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது. இதை முனைந்து உருவாக்கி இருப்பவர் ‘தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின்’ பங்குதாரர்களில் ஒருவரும், படைப்பாளரும், பெருந்தமிழருமான தாழை இரா.உதயநேசன் ஆவார்.

இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். ‘அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிப் பணிகள், தமிழ் அமர்வுகள், இலக்கண இலக்கிய வகுப்புகள், தமிழ் வகுப்புகள், படைப்பிலக்கியப் பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்த இருக்கிறது. அதோடு, தமிழின் சிறந்த படைப்பாளர்களைத் துறைவாரியாகத் தேர்வு செய்து, சிறப்பு முனைவர் பட்டங்களையும் இந்தப் பல்கலைக் கழகம் வழங்க இருக்கிறது. இதற்கான அங்கீகாரத்தையும் இந்தப் பல்கலைக் கழகம் பெற்றிருக்கிறது.

இந்தப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக டாக்டர் இரா.உதயநேசனும், துணைவேந்தராக டாக்டர் ஆல்வினும், பதிவாளராக முனைவர் கோ.பாட்டழகனும் இயங்கிவருகின்றனர். அண்மையில் நடந்த பல்கலைக் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வேந்தர் டாக்டர் இரா.உதயநேசன், துணைவேந்தர் டாக்டர் ஆல்வின் மற்றும் கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன், முனைவர் விஜயகுமாரி, முனைவர் சம்பத்குமார், கவிஞர் ரேணுகா ஸ்டாலின், டாக்டர் ஏ.ஜான் இளவரசு, வழக்கறிஞர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நாளை (18ஆம் தேதி) சால்வேசன் ஆர்மி அரங்கில் நடைபெறுகிறது. அதேபோல், பல்கலைக் கழகப் பெயர் பலகை திறப்பு விழாவும் நடக்கிறது. முனைவர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்துரை வழங்கி பல்கலைக்கழகபெயர் பலகையைத் திறந்துவைக்கிறார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்டம் பெறும் மதிப்புறு தமிழ் ஆளுமைகள்...

1) ஓவியக் கவிஞர்.அமுதபாரதி

2) கவிஞர்.ஆண்டாள் பிரியதர்சினி

3) கவிஞர்.ஆரூர் தமிழ்நாடன்

4 ) கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்

5) பாவலர்.சரஸ்வதி பாஸ்கரன்

America tamil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe