Skip to main content

ஆம்பூரை மாவட்ட தலைநகராக்குங்கள் –அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள மனிதநேய மக்கள் கட்சி!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

ambur

 

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், இராணிப்பேட்டை என இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை பகுதியில் உருவாகிவருகிறது. இந்நிலையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்ததூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூர் நகரத்தை அறிவிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை அறிக்கையில், இந்தியாவிற்கு மிக அதிக அளவில் அந்நிய செலவானியை ஈட்டி தரும் முதன்மையான நகரமாக ஆம்பூர் விளங்குகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட நகரமாகவும், வேலூருக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைத் தரக்கூடிய சார் பதிவாளர் அலுவலகம், மனிதநேய மக்கள் கட்சியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட புதிய போக்குவரத்து வட்டார அலுவலகம் மற்றும் பல கல்வி நிலையங்கள் ஆம்பூரில் உள்ளன. மேலும் ஆம்பூரில் 6 வழி தேசிய நெடுஞ்சாலையும் கடக்கிறது, இதே போல் நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில்கள் நின்று செல்லும் பெரிய ரயில் நிலையமும் ஆம்பூரில் அமைந்துள்ளது. மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் ஆம்பூர் நகரமே முன்னிலையில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பதற்கு ஆம்பூருக்கே அதிக தகுதி உள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூர் நகரத்தை அறிவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

மாவட்டம் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில் தற்போது மாவட்ட தலைநகராக ஆம்பூரை அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணம் பங்கீடு தொடர்பாக பாஜகவினர் மோதல்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Clash between BJP members over distribution of election money

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஆம்பூரில் பாஜகவினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், மாலை நேரத்தில் திடீரென இருதரப்பாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்தக் கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீவர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.