Skip to main content

ரயிலில் வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரயில்நிலையத்தில் குழந்தை பிறந்தது.

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் பெங்களூரில் அக்டோபர் 21 ந்தேதி விடியற்காலை பெங்களூரு வில் தனது ஊருக்கு செல்ல ஆம்பூர் நகருக்கு பிருந்தாவனம் ரயிலில் வந்துள்ளார்.
 

ambur incident


ரயிலில் வரும்போதே அவருக்கு லேசாக வலி வந்துள்ளது. பிரசவ தேதி நெருங்காததால் சூட்டுவலியாக இருக்கும் என பொருத்துக்கொண்டு வந்துள்ளார். ஆம்பூரில் ரயிலை விட்டு இறங்கியபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

அங்கிருந்து உடனே செல்ல வண்டிகள் இல்லாத நிலையில் வலி அதிகமாகி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த பெண்மணிகள் சிலர் உதவிய நிலையில், ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து குழந்தை மற்றும் தாய்யை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். தகவல் தெரிந்து உறவினர்கள், குடும்பத்தார் பின்னர் மருத்துவமனைக்கு வந்தனர்.


காலை நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பாக இருந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

கார்கள் மோதி விபத்து; 3 பேர் பலியான சோகம்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Car incident 3 people involved

இரு கார்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் என்ற பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், பெங்களுருவைச் சேர்ந்த மைத்தேரயன், பெண் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.