Skip to main content

ஆம்பூரில் வெடிகுண்டா? சோதனையிடும் போலீஸ்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து பின் தோல்வி அடைந்தார். திமுகவுக்கு சிறுபான்மை வாக்குகள் பெரும்பான்மையாக கிடைத்தது. குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதி வாக்குகள் திமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றன என்பது குறிப்பிடதக்கது.

 

a

 

இந்த வெற்றி அதிமுகவை விட இந்துத்துவா சக்திகளிடம் அதிகம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கோபத்தை இஸ்லாமியர்கள் மீது முகநூல், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூக வளைதளங்கள் வழியாக காட்டிவருகின்றனர். 


இந்நிலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூரில் வசிக்கும் இந்துத்துவாவை சேர்ந்த ஒருவர், ஆம்பூரில் குண்டு ஒன்னு வச்சியிருக்கன்... என முகநூலில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஆம்பூரில் உள்ள சமூக வளைத்தளவாசிகளிடம், இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த தகவல் வேகவேகமாக பரவ, காவல்துறை உயரதிகாரிகள் என்னவென ஆம்பூர் டி.எஸ்.பியிடம் விசாரணை நடத்தினர். 

 

உடனடியாக நகரம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தச்சொல்லியுள்ளனர். வேலூரில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் , பேருந்து நிலையம், ஆம்பூர் ரயில்வே நிலையம் உட்பட பல இடங்களில் எஸ்.ஐ நாகராஜ் தலைமையில் அக்கினி என்கிற பெயருடைய மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்கள் மோதி விபத்து; 3 பேர் பலியான சோகம்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Car incident 3 people involved

இரு கார்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் என்ற பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், பெங்களுருவைச் சேர்ந்த மைத்தேரயன், பெண் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

ஆம்பூர் ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடிகை ஷகிலா சாமி தரிசனம்!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Actress Shakila Swamy Darshanam at Ambur Anjaneyar Temple

 

பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூரில் உள்ள ஒரு சின்ன ஆலயத்தில் பிரபல நடிகை சென்னையில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ. கஸ்பா பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் சனி பகவானை காலில் மிதித்தபடி காட்சி அளிக்கிறார். இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், ராகு, கேது தோஷம், சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமீபகாலமாக வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகை ஷகிலா தனது குடும்பத்துடன் வந்து ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் விளக்கேற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.