Skip to main content

கரோனாவை பரப்பிய ஆம்புலன்ஸ் ஊழியர்... கரூரில் சோகம் !

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

Ambulance worker spreading corona ... Karur sad!


உலகமே கரோனா தொற்றினால் அலறிக்கொண்டு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் முயற்சியில் கரூர் கரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்த நிலையில், நோய் தொற்று பரிசோதனைக்கு உட்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தலில் இல்லாமல் ஊருக்கு சென்றதால் நோய் தொற்று ஏற்பட்டு அவர் மீது நோய் பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

சென்னையில் 108 ஆம்புலன்ஸில் ஊழியராக இருந்த ஒருவர், பெங்களுரில் பயிற்சிக்கு சென்று திரும்பினார். அப்போது அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று தெரிந்ததும் அவரை சொந்தவூரான கரூருக்கு மாற்றல் வேண்டும் என்று கேட்டு சென்று உள்ளார்.


அவர் சென்னையில் இருந்து கரூர் திரும்பியவுடன் இங்கிருந்த சுகாதார துறை அதிகாரிகள் கரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதால் அந்த ஆம்புலன்ஸ் ஊழியரை வீட்டில் 24 நாட்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தி நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

இந்த நிலையில் அவர் அரசு அதிகாரிகள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் சொந்தவூரான சின்னவரப்பாளையத்தை விட்டு வெளியேறி அவர் வெள்ளியணை 108 ஆம்புலன்ஸில் வேலைக்கு சென்று உள்ளார். அதே நேரத்தில் நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றியதும், தோப்பில் சென்று பிரியாணி சமைத்தும்,  கேக் ஊட்டியும் செம ஜாலியாக கொண்டாடியிருக்கிறார்.

 


இந்த நிலையில் கொண்டாட்டத்தின் அடுத்த நாள் அந்த ஊழியருக்கு லேசான காய்ச்சலும், முச்சுத்திணறலும், இருமலும் வந்ததை தொடர்ந்து பயந்து போய் மருத்துமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்த பரிசோதனையில் கரோனா தொற்று பாதிப்படைந்து இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பெயரில், வா்கல் போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர் மீதும், அவருக்கு வேலை கொடுத்த திருச்சி 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் அறிவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

 


மேலும் ஊழியர்கள், அவரின் பெற்றோர், ஊரில் அவருடன் பழகியவர்கள், வெள்ளியணையில் வேலை செய்தபோது அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் என 130 பேருக்கு கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து வருவதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வக்குமார் தெரிவித்தார்.

 

 

Ambulance worker spreading corona ... Karur sad!


இதே போன்று சென்னை கோயம்பேடு மார்கெட் பகுதியில் வேலை செய்த கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 19வயது வாலிபர் சென்னையிலிருந்து திருச்சி வந்து இங்கிருந்து லாரி மூலம் மணல்வாசி சுங்கசாவடி வழியே சென்று உள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் மாயனூர் காவல்நிலையத்திற்கு புகார் செய்துள்ளனர். உடனே சுகாதாரதுறையினர் உடனே அந்த வாலிபரை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதன் பிறகு கரூர் மாவட்டத்தை சுற்றி 18 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதில் சென்னை கோயம்பேட்டிலிருந்து மட்டும் 42 பேர் வந்துள்ளனர். இதில் 1 வாலிபருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 41 பேரின் சளி மற்றும் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வீட்டில் தனித்து இருக்க வேண்டியவர்கள் இந்த கால கட்டத்தில் வெளியே சுற்றுவதன் மூலம் இந்த தொற்றை மக்கள், மக்களுக்கே பரப்பி விடுவது பெரிய வேதனையான செய்தி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.