Skip to main content

108 ஆம்புலன்ஸை முடக்கிய நான்கு இம்சை அரசர்களுக்கு காப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

ambulance incident in thenkasi

 

தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவிலில் குடிமகன்களான இம்சை அரசர்களின் அட்டகாசம் எல்லை தாண்டியிருக்கிறது.

அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் நேற்றைய தினம் கடையநல்லூர் சமீபம் நடந்த விபத்தில், காயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸை முத்துராஜ் ஓட்டி வந்திருக்கிறார். அவருடன் செவிலியர் கார்த்திகேயன் பணியிலிருந்திருக்கிறார்.

ரயில்வே பீடர் ரோட்டின் தனியார் திருமணமண்டபம் அருகே ஆம்புலன்ஸ் இரவு 7 மணியளவில் வரும்போது, தள்ளாட்டத்தில் சலம்பிக் கொண்டு வந்த குடியன்பர்கள் சிலர், ஆம்புலன்சை வழிமறித்து டிரைவர், செவிலியர் இருவரையும் மிரட்டித் தகராறில் ஈடுபட்டவர்கள், பின்பு டிரைவரைத் தாக்கிவிட்டு நடுரோட்டில் நின்றிருந்த ஆம்புலன்சின் சாவியை எடுத்துக் கொண்டு பறந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் நடுரோட்டில் நின்றதால் இரவு அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் ஆம்புலன்சைத் தள்ளிக்கொண்டு போய் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தடைப்பட்ட போக்குவரத்தைக் க்ளியர் செய்தனர். காயமடைந்த டிரைவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்ஸின் சாவியில்லாததால், ஆம்புலன்ஸ்க்கு வந்த அவசர அழைப்பிற்கும் வாகனம் செல்ல முடியாத நிலை.

அதையடுத்து, போலீசார் மேற்கொண்ட முயற்சியால் நெல்லையிலிருந்து கொண்டு வரப்பட்ட மாற்றுச் சாவியின் மூலம் இரவு 11 மணிக்கு மேல் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நகரில் நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியதால், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்ட போலீசார், சங்கரன்கோவிலைச் சேர்ந்த கண்ணன், முத்துப்பாண்டி, முனியராஜ் உள்ளிட்ட 7 பேர்களை அடையாளம் கண்டவர்கள் மேற்கண்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

Ad


கேட்பதற்கு நாதியற்றுப் போய் வரைமுறையில்லாமல் திறந்த வெளிகளை பார் போல மாற்றி, குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து, மக்களின் நடமாட்டத்திற்கு ஊறு விளைவித்து, எல்லைமீறும் இந்த இம்சை அரசர்களுக்கு காப்புக் காட்டியிருக்கிறது காவல் துறை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்