ambulance incident tamilnadu health secretary order

ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து சேதமானதையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் தென்காசி அரசு மருத்துவமனையிலிருந்து சென்ற ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்தமிழகம் முழுவதும் உள்ள 1300 ஆம்புலன்ஸ்களை உரிய முறையில் பராமரிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது" என்றார்.

Advertisment

கரோனா காலத்தில் தொடர்ச்சியான இயக்கத்தினால் ஆம்புலன்ஸ்களை பராமரிக்க நேரமில்லை என்று தகவல் கூறுகின்றன.