Skip to main content

ஆம்புலன்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... நால்வர் படுகாயம்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Ambulance and truck collide head-on ... Four injured!

 

திருச்சி அருகே ஆம்புலன்ஸ்ம் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

 

திருச்சி லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி கவிதா. பிறந்து 16 நாட்களே ஆன இவர்களது ஆண் குழந்தைக்கு இயற்கை உபாதை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை மற்றும் தாயை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் முத்தமிழ் நகர் என்னுமிடத்தில் முன்னே சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த லாரி பலமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்புலன்சின் முகப்பு பக்கம் நொறுங்கி சேதமானது. இந்த விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை, தாய் கவிதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்த ஊர் மக்கள் மோதி கொண்ட இரண்டு வாகனங்களையும் தனித்தனியாகக் கயிறு கட்டி இழுத்து விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். நான்கு பேரும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நால்வருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்